யோவான் 8:24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
Tamil Indian Revised Version
ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.
Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.”
Thiru Viviliam
ஆகவேதான், நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ‘இருக்கிறவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்” என்றார்.
King James Version (KJV)
I said therefore unto you, that ye shall die in your sins: for if ye believe not that I am he, ye shall die in your sins.
American Standard Version (ASV)
I said therefore unto you, that ye shall die in your sins: for except ye believe that I am `he’, ye shall die in your sins.
Bible in Basic English (BBE)
For this reason I said to you that death will overtake you in your sins: for if you have not faith that I am he, death will come to you while you are in your sins.
Darby English Bible (DBY)
I said therefore to you, that ye shall die in your sins; for unless ye shall believe that I am [he], ye shall die in your sins.
World English Bible (WEB)
I said therefore to you that you will die in your sins; for unless you believe that I am he, you will die in your sins.”
Young’s Literal Translation (YLT)
I said, therefore, to you, that ye shall die in your sins, for if ye may not believe that I am `he’, ye shall die in your sins.’
யோவான் John 8:24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
I said therefore unto you, that ye shall die in your sins: for if ye believe not that I am he, ye shall die in your sins.
| εἶπον | eipon | EE-pone | |
| οὖν | oun | oon | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἀποθανεῖσθε | apothaneisthe | ah-poh-tha-NEE-sthay | |
| ἐν | en | ane | |
| ταῖς | tais | tase | |
| ἁμαρτίαις | hamartiais | a-mahr-TEE-ase | |
| ὑμῶν· | hymōn | yoo-MONE | |
| ἐὰν | ean | ay-AN | |
| γὰρ | gar | gahr | |
| μὴ | mē | may | |
| πιστεύσητε | pisteusēte | pee-STAYF-say-tay | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἐγώ | egō | ay-GOH | |
| εἰμι | eimi | ee-mee | |
| ἀποθανεῖσθε | apothaneisthe | ah-poh-tha-NEE-sthay | |
| ἐν | en | ane | |
| ταῖς | tais | tase | |
| ἁμαρτίαις | hamartiais | a-mahr-TEE-ase | |
| ὑμῶν | hymōn | yoo-MONE |
Cross Reference
எபிரெயர் 12:25
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?
யோவான் 3:36
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
எபிரெயர் 10:26
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
மாற்கு 16:16
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
எபிரெயர் 2:3
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
யோவான் 8:21
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.
யோவான் 3:18
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
நீதிமொழிகள் 8:36
எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
யோவான் 13:19
அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 4:26
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
லுூக்கா 21:8
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
மாற்கு 13:6
ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
Tags ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன் நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்
John 8:24 in Tamil Concordance John 8:24 in Tamil Interlinear John 8:24 in Tamil Image