சங்கீதம் 80

fullscreen1 இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

fullscreen2 எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.

fullscreen3 தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

fullscreen4 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

fullscreen5 கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.

fullscreen6 எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள்.

fullscreen7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

fullscreen8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர்.

fullscreen9 அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.

fullscreen10 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.

fullscreen11 அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.

fullscreen12 இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

fullscreen13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.

fullscreen14 சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;

fullscreen15 உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.

fullscreen16 அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.

fullscreen17 உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக.

fullscreen18 அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.

fullscreen19 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Tamil Indian Revised Version
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன். தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.

Thiru Viviliam
⁽அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என␢ அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு␢ என்ன சொல்வார் என்பதையும்␢ நான் புரிந்து கொள்வேன்.⁾

யோபு 23:4யோபு 23யோபு 23:6

King James Version (KJV)
I would know the words which he would answer me, and understand what he would say unto me.

American Standard Version (ASV)
I would know the words which he would answer me, And understand what he would say unto me.

Bible in Basic English (BBE)
I would see what his answers would be, and have knowledge of what he would say to me.

Darby English Bible (DBY)
I would know the words he would answer me, and understand what he would say unto me.

Webster’s Bible (WBT)
I would know the words which he would answer me, and understand what he would say to me.

World English Bible (WEB)
I would know the words which he would answer me, And understand what he would tell me.

Young’s Literal Translation (YLT)
I know the words He doth answer me, And understand what He saith to me.

யோபு Job 23:5
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
I would know the words which he would answer me, and understand what he would say unto me.

I
would
know
אֵ֭דְעָהʾēdĕʿâA-deh-ah
the
words
מִלִּ֣יםmillîmmee-LEEM
answer
would
he
which
יַעֲנֵ֑נִיyaʿănēnîya-uh-NAY-nee
understand
and
me,
וְ֝אָבִ֗ינָהwĕʾābînâVEH-ah-VEE-na
what
מַהmama
he
would
say
יֹּ֥אמַרyōʾmarYOH-mahr
unto
me.
לִֽי׃lee