1 இறைவாக்கினர் அபக்கூக்கு ‘சிகாயோன்’ பண்களில் பாடிய மன்றாட்டு:

2 ⁽ஆண்டவரே,␢ உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்;␢ ஆண்டவரே,␢ உம் செயலைக் கண்டு␢ அச்சமடைகிறேன்;␢ எங்கள் வாழ்நாள் காலத்திலேயே␢ அதை மீண்டும் செய்யும்;␢ காலப்போக்கில் அதை␢ அனைவரும் அறியும்படி செய்யும்;␢ சினமுற்றபோதும்␢ உமது இரக்கத்தை நினைவு கூரும்.⁾

3 ⁽தேமானிலிருந்து␢ இறைவன் வருகிறார்;␢ பாரான் மலையிலிருந்து␢ புனிதர் வருகிறார். (சோலா)␢ அவரது மாட்சி␢ விண்ணுலகை மூடியிருக்கின்றது;␢ அவரது புகழால்␢ மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.⁾

4 ⁽அவரது பேரொளி␢ கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது;␢ அவர் கையினின்று␢ ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன;␢ அங்கேதான் அவரது வல்லமை␢ மறைந்திருக்கின்றது.⁾

5 ⁽அவருக்கு முன்பாகப்␢ பெருவாரி நோய் செல்கின்றது;␢ அவருடைய அடிச்சுவடுகளைத்␢ தொடர்ந்து␢ கொள்ளைநோய் புறப்படுகின்றது.⁾

6 ⁽அவர் நின்றால்,␢ நிலம் அதிர்கின்றது,␢ அவர் நோக்கினால்␢ வேற்றினத்தார் நடுங்குகின்றனர்;␢ தொன்றுதொட்டு இருக்கும் மலைகள்␢ பிளவுண்டு போகின்றன.␢ பண்டைக் காலக் குன்றுகள்␢ அமிழ்ந்து விடுகின்றன.␢ அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.⁾

7 ⁽கூசாவின் கூடாரங்களில்␢ வேதனை நிறைந்திருப்பதை␢ நான் கண்டேன்;␢ மிதியான் நாட்டுக் கூடாரத் திரைகள்␢ நடுநடுங்கின.⁾

8 ⁽ஆண்டவரே,␢ நீர் உம்முடைய குதிரைகள் மேலும்,␢ வெற்றித் தேர்மேலும் ஏறிவரும்போது,␢ நீரோடைகள்மீதா␢ உம் கோபத்தீ மூண்டது?␢ ஆறுகள் மீதா உம் சினம் பெருகியது?␢ கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?⁾

9 ⁽நீர் உம் வில்லைக் கையிலெடுத்து␢ நாணேற்றுகின்றீர்;␢ அம்பறாத் தூணியை␢ அம்புகளால் நிரப்புகின்றீர்; (சேலா)␢ நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.⁾

10 ⁽மலைகள் உம்மைக்கண்டு␢ நடுங்கின்றன;␢ பெரும் வெள்ளங்கள்␢ பீறிட்டுப் பாய்கின்றன;␢ ஆழ்கடல்␢ தன் இரைச்சலை எழுப்புகின்றது;␢ அது தன் கைகளை␢ மேலே உயர்த்துகின்றது.⁾

11 ⁽கதிரவனும் நிலவும்␢ தங்கள் இருப்பிடத்திலேயே␢ நிலைத்து நிற்கின்றன;␢ பாய்ந்தோடும் உம் அம்புகளின்␢ ஒளியின் முன்னும்,␢ பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய␢ சுடரின் முன்னும்␢ தங்கள் செயல் திறனை␢ இழந்து நிற்கின்றன.⁾

12 ⁽சினத்தோடு மண்ணுலகில்␢ நடந்து போகின்றீர்;␢ சீற்றம்கொண்டு␢ வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.⁾

13 ⁽உம் மக்களை மீட்கவும்,␢ நீர் திருப்பொழிவு செய்தவரை␢ விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர்.␢ பொல்லாதவனின் குடும்பத் தலைவனை␢ வெட்டி வீழ்த்துகின்றீர்.␢ அவனைப் பின்பற்றுவோரை␢ முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)⁾

14 ⁽அவன் படைத்தலைவனின் தலையை␢ அவன் ஈட்டிகளைக் கொண்டே␢ பிளக்கின்றீர்;␢ அவனோ ஒடுக்கப்பட்டவனை␢ மறைவாக விழுங்கி␢ மகிழ்வது போல மகிழ்ந்து,␢ சூறாவளிக் காற்றென␢ என்னைச் சிதறடிக்கப்␢ பாய்ந்து வருகின்றான்.⁾

15 ⁽ஆனால், நீர்␢ உம்முடைய குதிரைகளால்␢ ஆழ்கடலை மிதித்து,␢ பெருவெள்ளக் குவியலைச்␢ சிதறடிக்கின்றீர்.⁾

16 ⁽இதை நான் கேட்கும்போது␢ என் உடல் நடுநடுங்குகின்றது;␢ அப்பேரொலியைக் கேட்பதனால்␢ என் உதடுகள் துடிதுடிக்கின்றன;␢ என் எலும்புகள் உளுத்துப் போகின்றன;␢ என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே␢ தடுமாறுகின்றன;␢ எங்களைத் தாக்கும் மக்கள்மீது␢ இடுக்கண் வரும் நாள்வரை␢ அமைதியாய்க் காத்திருப்பேன்.⁾

17 ⁽அத்திமரம் துளிர்த்து␢ அரும்பாமல் போயினும்,␢ திராட்சைக் கொடிகள்␢ கனி தராவிடினும்␢ ஒலிவ மரங்கள்␢ பயன் அற்றுப் போயினும்,␢ வயல்களில்␢ தானியம் விளையாவிடினும்,␢ கிடையில் ஆடுகள் யாவும்␢ அழிந்து போயினும்,␢ தொழுவங்களில்␢ மாடுகள் இல்லாது போயினும்,⁾

18 ⁽நான் ஆண்டவரில் களிகூர்வேன்;␢ என் மீட்பரான கடவுளில்␢ மகிழ்ச்சியுறுவேன்.⁾

19 ⁽ஆண்டவராகிய என் தலைவரே␢ என் வலிமை;␢ அவர் என் கால்களைப்␢ பெண்மானின்␢ கால்களைப் போலாக்குவார்;␢ உயர்ந்த இடங்களுக்கு␢ என்னை நடத்திச் செல்வார்.⁾

ஆபகூக் 3 ERV IRV TRV