1 ⁽“வாருங்கள், ஆண்டவரிடம் நாம்␢ திரும்புவோம்; நம்மைக்␢ காயப்படுத்தியவர் அவரே,␢ அவரே நம்மைக் குணமாக்குவார்;␢ நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே,␢ அவரே நம் காயங்களைக் கட்டுவார்.⁾

2 ⁽இரண்டு நாளுக்குப் பிறகு␢ நமக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ மூன்றாம் நாளில்␢ நம்மை எழுப்பி விடுவார்;␢ அப்பொழுது நாம்␢ அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.⁾

3 ⁽நாம் அறிவடைவோமாக,␢ ஆண்டவரைப்பற்றி␢ அறிய முனைந்திடுவோமாக;␢ அவருடைய புறப்பாடு␢ புலரும் பொழுதுபோல் திண்ணமானது;␢ மழைபோலவும், நிலத்தை நனைக்கும்␢ இளவேனிற்கால மாரிபோலவும்␢ அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.⁾

4 ⁽எப்ராயிமே! உன்னை நான்␢ என்ன செய்வேன்?␢ யூதாவே! உன்னை நான்␢ என்ன செய்வேன்?␢ உங்கள் அன்பு␢ காலைநேர மேகம் போலவும்␢ கதிரவனைக் கண்ட பனிபோலவும்␢ மறைந்துபோகிறதே!⁾

5 ⁽அதனால்தான் நான்␢ இறைவாக்கினர் வழியாக␢ அவர்களை வெட்டி வீழ்த்தினேன்;␢ என் வாய்மொழிகளில்␢ அவர்களைக் கொன்று விட்டேன்;␢ எனது தண்டனைத் தீர்ப்பு␢ ஒளிபோல வெளிப்படுகின்றது.⁾

6 ⁽உண்மையாகவே␢ நான் விரும்புவது பலியை அல்ல,␢ இரக்கத்தையே விரும்புகின்றேன்;␢ எரிபலிகளைவிட,␢ கடவுளை அறியும் அறிவையே␢ நான் விரும்புகின்றேன்.⁾

7 ⁽அவர்களோ ஆதாம்* என்ற இடத்தில்␢ உடன்படிக்கையை மீறினார்கள்;␢ அங்கே எனக்கு␢ நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.⁾

8 ⁽கிலயாது கொடியோர் நிறைந்த நகர்;␢ அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.⁾

9 ⁽கொள்ளையர் கூட்டம்␢ வழிப்போக்கருக்காகக்␢ காத்திருப்பது போல்␢ குருக்களின் கூட்டம்␢ செக்கேமுக்குப் போகிற வழியில்␢ காத்திருந்து கொலை செய்கின்றது;␢ கொடுமையன்றோ அவர்கள் செய்வது!⁾

10 ⁽இஸ்ரயேல் குடும்பத்தாரிடம்␢ மிகக் கொடிய செயலொன்றை␢ நான் கண்டேன்;␢ அங்கே எப்ராயிமின்␢ வேசித்தனம் இருந்தது,␢ இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.⁾

11 ⁽யூதாவே! உனக்கும்␢ அறுவடைக்காலம் ஒன்று␢ குறிக்கப்பட்டிருக்கின்றது.␢ நான் என் மக்களை␢ நன்னிலைக்குத் திரும்பக்␢ கொணரும் போது,⁾