1 உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

2 ⁽விண்வெளியே கேள்;␢ மண்ணுலகே செவிகொடு:␢ ஆண்டவர் திருவாய்␢ மலர்ந்தருளுகின்றார்;␢ பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்;␢ அவர்களோ எனக்கெதிராகக்␢ கிளர்ந்தெழுந்தார்கள்.⁾

3 ⁽காளை தன் உடைமையாளனை␢ அறிந்து கொள்கின்றது;␢ கழுதை தன் தலைவன் தனக்குத்␢ தீனி போடும் இடத்தைத்␢ தெரிந்து கொள்கின்றது;␢ ஆனால் இஸ்ரயேலோ␢ என்னை அறிந்து கொள்ளவில்லை;␢ என் மக்களோ␢ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.⁾

4 ⁽ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது;␢ அநீதி செய்வோரின் கூட்டம் இது;␢ தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது;␢ கேடுகெட்ட மக்கள் இவர்கள்;␢ ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்;␢ இஸ்ரயேலின் தூயவரை␢ அவமதித்துவிட்டார்கள்;␢ அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.⁾

5 ⁽நீங்கள் ஏன் தொடர்ந்து␢ வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்?␢ என் கையால் பட்ட அடி போதாதா?␢ உங்கள் தலையெல்லாம் வடுக்கள்;␢ இதயமெல்லாம் தளர்ச்சி.⁾

6 ⁽உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை␢ உங்கள் உடலில் நலமே இல்லை;␢ ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள்,␢ சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன;␢ அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை,␢ கட்டு போடப்படவில்லை,␢ எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.⁾

7 ⁽உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது;␢ உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின;␢ வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே␢ உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்;␢ வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட␢ உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.⁾

8 ⁽மகள் சீயோன்␢ திராட்சைத் தோட்டத்துக்␢ குடில் போன்றும்␢ வெள்ளரித் தோட்டத்துக்␢ குடிசை போன்றும்␢ முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும்␢ கைவிடப்பட்டாள்.⁾

9 ⁽படைகளின் ஆண்டவர்␢ நம்மில் சிலரையேனும்␢ எஞ்சியிருக்கச் செய்யாவிடில்␢ சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்.␢ கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.⁾

10 ⁽எருசலேமே,␢ உன்னை ஆளுகிறவர்களும்␢ உன் மக்களும்,␢ சோதோம் கொமோராவைப்␢ போன்றவர்களாயிருக்கின்றனர்;␢ நம் ஆண்டவரின்␢ அறிவுரையைக் கேளுங்கள்;␢ அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.⁾

11 ⁽“எண்ணற்ற உங்கள் பலிகள்␢ எனக்கு எதற்கு?”␢ என்கிறார் ஆண்டவர்.␢ ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும்,␢ கொழுத்த விலங்குகளின் கொழுப்பும்␢ எனக்குப் போதுமென்றாகிவிட்டன;␢ காளைகள், ஆட்டுக் குட்டிகள்,␢ வெள்ளாட்டுக் கிடாய்கள்␢ இவற்றின் இரத்தத்திலும்␢ எனக்கு நாட்டமில்லை.⁾

12 ⁽நீங்கள் என்னை வழிபட␢ என் திருமுன் வரும்போது,␢ இவற்றையெல்லாம் கொண்டு வந்து␢ என் கோவில் முற்றத்தை␢ மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?⁾

13 ⁽இனி, காணிக்கைகளை␢ வீணாகக் கொண்டுவர வேண்டாம்;␢ நீங்கள் காட்டும் தூபம்␢ எனக்கு அருவருப்பையே தருகின்றது;␢ நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும்␢ அமாவாசை, ஓய்வுநாள்␢ வழிபாட்டுக் கூட்டங்களை␢ நான் சகிக்க மாட்டேன்.⁾

14 ⁽உங்கள் அமாவாசை, திருவிழாக்␢ கூட்டங்களையும்,␢ என் உள்ளம் வெறுக்கின்றது;␢ அவை என் மேல் விழுந்த சுமையாயின;␢ அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன்.⁾

15 ⁽என்னை நோக்கி உங்கள் கைகளை␢ நீங்கள் உயர்த்தும் போது,␢ பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்;␢ நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும்␢ நான் செவிகொடுப்பதில்லை;␢ உங்கள் கைகளோ␢ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.⁾

16 ⁽உங்களைக் கழுவித்␢ தூய்மைப்படுத்துங்கள்;␢ உங்கள் தீச்செயலை␢ என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்;␢ தீமை செய்தலை விட்டொழியுங்கள்;⁾

17 ⁽நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்;␢ நீதியை நாடித் தேடுங்கள்;␢ ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்;␢ திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்;␢ கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.⁾

18 ⁽“வாருங்கள், இப்பொழுது␢ நாம் வழக்காடுவோம்”␢ என்கிறார் ஆண்டவர்;␢ “உங்கள் பாவங்கள்␢ கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன;␢ எனினும் உறைந்த பனிபோல␢ அவை வெண்மையாகும்.␢ இரத்த நிறமாய்␢ அவை சிவந்திருக்கின்றன;␢ எனினும் பஞ்சைப்போல்␢ அவை வெண்மையாகும்.⁾

19 ⁽மனமுவந்து நீங்கள்␢ எனக்கு இணங்கி நடந்தால்;␢ நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.⁾

20 ⁽மாறாக, இணங்க மறுத்து␢ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால்,␢ திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்;␢ ஏனெனில் ஆண்டவர்தாமே␢ இதைக் கூறினார்.⁾

21 ⁽உண்மையாய் இருந்த நகரம்,␢ எப்படி விலைமகள் போல் ஆயிற்று!␢ முன்பு அந்நகரில்␢ நேர்மை நிறைந்திருந்தது;␢ நீதி குடி கொண்டிருந்தது;␢ இப்பொழுதோ,␢ கொலைபாதகர் மலிந்துள்ளனர்.⁾

22 ⁽உன் வெள்ளி களிம்பேறிற்று;␢ உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.⁾

23 ⁽உன் தலைவர்கள்␢ வன்முறையில் ஈடுபடுகின்றனர்;␢ திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்;␢ கையூட்டு வாங்குவதற்கு␢ ஒவ்வொருவனும் ஏங்குகின்றான்.␢ திக்கற்றோருக்கு அவர்கள்␢ நீதி வழங்குவதில்லை;␢ கைம்பெண்ணின் வழக்குகளைத்␢ தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.⁾

24 ⁽ஆதலால், படைகளின் ஆண்டவரும்␢ இஸ்ரயேலின் வல்லவருமாகிய␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ என் எதிரிகளைப் பழிவாங்குவேன்;␢ என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத்␢ தீர்த்துக்கொள்வேன்.⁾

25 ⁽உனக்கு நேராக␢ என் கைகளை நீட்டுவேன்;␢ உன்னை நன்றாகப் புடமிட்டு␢ உன் களிம்பை நீக்குவேன்;␢ உன்னிடமுள்ள உலோகக் கலவை␢ அனைத்தையும் நீக்குவேன்.⁾

26 ⁽முன்னாளில் இருந்தது போலவே␢ உன் நீதிபதிகளைத்␢ திருப்பிக் கொணர்வேன்;␢ தொடக்க காலத்தில் இருந்தது போலவே␢ உன் ஆலோசகர்களை␢ மீண்டும் தருவேன்;␢ அப்பொழுது எருசலேம்␢ ‘நீதியின் நகர்’␢ எனப் பெயர் பெறும்;␢ ‘உண்மையின் உறைவிடம்’ எனவும்␢ அழைக்கப்படும்.⁾

27 ⁽நீதி சீயோனை மீட்கும்;␢ நேர்மை மனமாற்றம் அடைவோரை␢ விடுவிக்கும்.⁾

28 ⁽ஆனால் வன்முறையாளரும் பாவிகளும்␢ ஒருங்கே அழிந்தொழிவர்;␢ ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள்␢ அனைவரும் இல்லாதொழிவர்;⁾

29 ⁽நீங்கள் நாடி வழிபட்ட␢ தேவதாரு மரங்களை முன்னிட்டு␢ மானக்கேடு அடைவீர்கள்;␢ நீங்கள் தெரிந்து கொண்ட␢ சோலைகளை முன்னிட்டு␢ நாணுவீர்கள்;⁾

30 ⁽ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த␢ தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்;␢ நீரின்றி வாடிப்போகும்␢ சோலையைப் போலவும் இருப்பீர்கள்;⁾

31 ⁽வலிமை மிக்கவன்␢ சணற் கூளம் போலாவான்;␢ அவனுடைய கைவேலைப்பாடும்␢ தீப்பொறியாகும்;␢ அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்;␢ நெருப்புத் தணலை அணைப்பார்␢ எவரும் இரார்.⁾

ஏசாயா 1 ERV IRV TRV