1 ⁽ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான்␢ உம்மை மேன்மைப்படுத்துவேன்;␢ உன் பெயரைப் போற்றுவேன்;␢ நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்;␢ நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத்␢ திண்ணமாகவும் உறுதியாகவும்␢ நிறைவேற்றியுள்ளீர்.⁾

2 ⁽ஏனெனில், நீ நகரத்தைக்␢ கற்குவியலாக்கினீர்;␢ அரண்சூழ்ந்த பட்டணத்தைப்␢ பாழடையச் செய்தீர்;␢ அயல் நாட்டினரின் கோட்டை அது;␢ இனி நகராய் இராது;␢ என்றுமே கட்டி எழுப்பப்படாது.⁾

3 ⁽ஆதலால் வலிமைமிகு மக்களினம்␢ உம்மைப் பெருமைப்படுத்தும்;␢ முரடரான வேற்றின நகரத்தினர்␢ உமக்கு அஞ்சுவர்.⁾

4 ⁽ஏழைகளுக்கு நீர்␢ அரணாய் இருக்கின்றீர்;␢ வறியவனுக்கு அவன் துன்பத்தில்␢ உறைவிடம் நீரே;␢ புயற்காற்றில் புகலிடமாகவும்,␢ கடும் வெப்பத்தில்␢ குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்;␢ ஏனெனில் முரடர்களின் சீற்றம்␢ மதிற்சுவரை மோதித் தாக்கும்␢ பெரும் புயல் போலும்,⁾

5 ⁽வறண்ட நிலத்தில்␢ வெப்பம் போலும் இருக்கும்.␢ கார்மேக நிழல்␢ வெயிலைத் தணிப்பது போல்␢ அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை␢ நீர் அடங்கச் செய்கின்றீர்;␢ முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.⁾

6 ⁽படைகளின் ஆண்டவர் இந்த மலையில்␢ மக்களினங்கள் அனைவருக்கும்␢ சிறந்ததொரு விருந்தை␢ ஏற்பாடு செய்வார்;␢ அதில் சுவைமிக்க பண்டங்களும்,␢ பழரசப் பானமும்,␢ கொழுப்பான இறைச்சித் துண்டுகளும்,␢ வடிகட்டிப் பக்குவப்படுத்திய␢ திராட்சை இரசமும் பரிமாறப்படும்.⁾

7 ⁽மக்களினங்கள் அனைவரின்␢ முகத்தை மூடியுள்ள முக்காட்டை␢ இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்;␢ பிற இனத்தார் அனைவரின்␢ துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.⁾

8 ⁽என்றுமே இல்லாதவாறு␢ சாவை ஒழித்துவிடுவார்;␢ என் தலைவராகிய ஆண்டவர்␢ எல்லா முகங்களிலிருந்தும்␢ கண்ணீரைத் துடைத்து விடுவார்;␢ தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை␢ இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்;␢ ஏனெனில், ஆண்டவரே␢ இதை உரைத்தார்.⁾

9 ⁽அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்;␢ இவரே நம் கடவுள்;␢ இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்;␢ இவர் நம்மை விடுவிப்பார்;␢ இவரே ஆண்டவர்;␢ இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;␢ இவர் தரும் மீட்பில்␢ நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”⁾

10 ⁽ஆண்டவரின் ஆற்றல்␢ இம் மலையில் தங்கியிருக்கும்;␢ எருக்குழி நீரில்␢ வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல்,␢ மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.⁾

11 ⁽நீந்துபவன் நீந்துவதற்காகத்␢ தன் கைகளை விரிப்பதுபோல்,␢ மோவாபு தன் கைகளை விரிப்பான்;␢ ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும்␢ கைவினைச் செயல்களையும்␢ விழச் செய்வார்.⁾

12 ⁽வானளாவ உயர்ந்துநிற்கும்␢ உன் அரண்களை அவர் விழத் தள்ளி,␢ தரைமட்டமாக்குவார்;␢ அவை புழுதியோடு புழுதியாகி␢ மண்ணோடு மண்ணாகும்.⁾

ஏசாயா 25 ERV IRV TRV