1 ⁽தாகமாய் இருப்பவர்களே,␢ நீங்கள் அனைவரும்␢ நீர்நிலைகளுக்கு வாருங்கள்;␢ கையில் பணமில்லாதவர்களே,␢ நீங்களும் வாருங்கள்;␢ தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,␢ வாருங்கள், காசு பணமின்றித்␢ திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.⁾

2 ⁽உணவாக இல்லாத ஒன்றிற்காக␢ நீங்கள் ஏன் பணத்தைச்␢ செலவிடுகின்றீர்கள்?␢ நிறைவு தராத ஒன்றிற்காய்␢ ஏன் உங்கள் உழைப்பை␢ வீணாக்குகிறீர்கள்?␢ எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்;␢ நல்லுணவை உண்ணுங்கள்;␢ கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.⁾

3 ⁽எனக்குச் செவிகொடுங்கள்,␢ என்னிடம் வாருங்கள்;␢ கேளுங்கள்; அப்பொழுது␢ நீங்கள் வாழ்வடைவீர்கள்.␢ நான் உங்களுடன் ஓர்␢ என்றுமுள உடன்படிக்கையைச்␢ செய்து கொள்வேன்;␢ தாவீதுக்கு நான் காட்டிய␢ மாறாத பேரன்பை␢ உங்களுக்கும் காட்டுவேன்.⁾

4 ⁽நான் அவனை␢ மக்களினங்களுக்குச் சாட்சியாகவும்,␢ வேற்றினங்களுக்குத் தலைவராகவும்␢ தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.⁾

5 ⁽இதோ, நீ அறியாத␢ பிற இனமக்களை அழைப்பாய்;␢ உன் கடவுளாகிய ஆண்டவரை,␢ இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு,␢ உன்னை அறியாத பிறஇனத்தார்␢ உன்னிடம் ஓடிவருவர்.␢ ஏனெனில், அவர் உன்னை␢ மேன்மைப்படுத்தியுள்ளார்.⁾

6 ⁽ஆண்டவரைக் காண்பதற்கு␢ வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்;␢ அவர் அண்மையில் இருக்கும்போதே␢ அவரை நோக்கி மன்றாடுங்கள்.⁾

7 ⁽கொடியவர் தம் வழிமுறையையும்,␢ தீயவர் தம் எண்ணங்களையும்␢ விட்டுவிடுவார்களாக;␢ அவர்கள் ஆண்டவரிடம்␢ திரும்பி வரட்டும்; அவர்␢ அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்;␢ அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்;␢ ஏனெனில், மன்னிப்பதில்␢ அவர் தாராள மனத்தினர்.⁾

8 ⁽என் எண்ணங்கள்␢ உங்கள் எண்ணங்கள் அல்ல,␢ உங்கள் வழிமுறைகள்␢ என் வழிமுறைகள் அல்ல,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

9 ⁽மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம்␢ மிக உயர்ந்து இருப்பதுபோல␢ உங்கள் வழிமுறைகளைவிட␢ என் வழிமுறைகளும்,␢ உங்கள் எண்ணங்களைவிட␢ என் எண்ணங்களும்␢ மிக உயர்ந்திருக்கின்றன.⁾

10 ⁽மழையும் பனியும்␢ வானத்திலிருந்து இறங்கி வருகின்றன;␢ அவை நிலத்தை நனைத்து,␢ முளை அரும்பி வளரச் செய்து,␢ விதைப்பவனுக்கு விதையையும்␢ உண்பவனுக்கு உணவையும்␢ கொடுக்காமல்,␢ அங்குத் திரும்பிச் செல்வதில்லை.⁾

11 ⁽அவ்வாறே, என் வாயிலிருந்து␢ புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.␢ அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி,␢ எதற்காக நான் அதை அனுப்பினேனோ␢ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல்␢ வெறுமையாய் என்னிடம்␢ திரும்பி வருவதில்லை.⁾

12 ⁽மகிழ்ச்சியுடன் நீங்கள்␢ புறப்பட்டுச் செல்வீர்கள்;␢ அமைதியுடன்␢ நடத்திச் செல்லப் படுவீர்கள்;␢ மலைகளும் குன்றுகளும் உங்கள் முன்␢ முழங்கி மகிழ்ந்து பாடும்;␢ காட்டு மரங்கள்␢ கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.⁾

13 ⁽முட்செடிக்குப் பதிலாக␢ தேவதாரு மரம் முளைத்து வளரும்;␢ காஞ்சொறிக்குப் பதிலாக␢ நறுமணச் செடி துளிர்த்து வளரும்;␢ இது, ஆண்டவருக்கு␢ நற்பெயர் ஏற்படச் செய்யும்;␢ அழிவில்லா, என்றுமுள␢ நினைவுச் சின்னமாய் அமையும்.⁾