1 ⁽பேரொலி எழுப்பிக் கூப்பிடு,␢ நிறுத்திவிடாதே;␢ எக்காளம் முழங்குவது போல்␢ உன் குரலை உயர்த்து;␢ என் மக்களுக்கு␢ அவர்களின் வன்செயல்களையும்,␢ யாக்கோபின் குடும்பத்தாருக்கு␢ அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.⁾

2 ⁽அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும்␢ மக்களினம்போலும்,␢ தங்கள் கடவுளின் கட்டளையைக்␢ கடைப்பிடிப்போர் போலும்␢ நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்;␢ என் நெறிமுறைகள் பற்றிய␢ அறிவை நாடுகின்றார்கள்;␢ நேர்மையான நீதித்தீர்ப்புகளை␢ என்னிடம் வேண்டுகின்றார்கள்;␢ கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.⁾

3 ⁽‘நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது,␢ நீர் எங்களை நோக்காதது ஏன்?␢ நாங்கள் எங்களைத்␢ தாழ்த்திக் கொண்டபோது␢ நீர் எங்களைக் கவனியாதது ஏன்?␢ என்கிறார்கள்.␢ நீங்கள் நோன்பிருக்கும் நாளில்␢ உங்கள் ஆதாயத்தையே␢ நாடுகின்றீர்கள்;␢ உங்கள் வேலையாள்கள் அனைவரையும்␢ ஒடுக்குகின்றீர்கள்.⁾

4 ⁽இதோ, வழக்காடவும்,␢ வீண்சண்டையிடவும்,␢ கொடும் கையால் தாக்கவுமே␢ நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்!␢ இன்றுபோல் நீங்கள்␢ உண்ணா நோன்பிருந்தால்␢ உங்கள் குரல் உன்னதத்தில்␢ கேட்கப்படாது.⁾

5 ⁽ஒருவன் தன்னை␢ ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான்␢ உண்ணாநோன்பின் நாளாகத்␢ தெரிந்து கொள்வது?␢ ஒருவன் நாணலைப் போல்␢ தன் தலையைத் தாழ்த்திச்␢ சாக்கு உடையையும் சாம்பலையையும்␢ அணிந்து கொள்வதா␢ எனக்கு ஏற்ற நோன்பு?␢ இதையா நீங்கள் நோன்பு என்றும்␢ ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும்␢ அழைக்கின்றீர்கள்?⁾

6 ⁽கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும்,␢ நுகத்தின் பிணையல்களை அறுப்பதும்␢ ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து␢ அனுப்புவதும், எவ்வகை␢ நுகத்தையும் உடைப்பதும் அன்றோ␢ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!⁾

7 ⁽பசித்தோர்க்கு உங்கள் உணவைப்␢ பகிர்ந்து கொடுப்பதும்␢ தங்க இடமில்லா வறியோரை␢ உங்கள் இல்லத்திற்கு␢ அழைத்து வருவதும்,␢ உடையற்றோரைக் காணும்போது␢ அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்␢ உங்கள் இனத்தாருக்கு உங்களை␢ மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ␢ நான் விரும்பும் நோன்பு!⁾

8 ⁽அப்பொழுது உன் ஒளி␢ விடியல் போல் எழும்;␢ விரைவில் உனக்கு␢ நலமான வாழ்வு துளிர்க்கும்;␢ உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;␢ ஆண்டவரின் மாட்சி␢ உனக்குப் பின்சென்று காக்கும்.⁾

9 ⁽அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்;␢ அவர் உனக்குப் பதிலளிப்பார்;␢ நீ கூக்குரல் இடுவாய்;␢ அவர் ‘இதோ! நான்’ என␢ மறுமொழி தருவார்.␢ உன்னிடையே இருக்கும்␢ நுகத்தை அகற்றிவிட்டு,␢ சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும்␢ பொல்லாதன பேசுவதையும்␢ நிறுத்திவிட்டு,⁾

10 ⁽பசித்திருப்போருக்காக␢ உன்னையே கையளித்து,␢ வறியோரின் தேவையை␢ நிறைவு செய்வாயானால்,␢ இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்;␢ இருண்ட உன் நிலை␢ நண்பகல் போல் ஆகும்.⁾

11 ⁽ஆண்டவர் தொடர்ந்து␢ உன்னை வழிநடத்துவார்;␢ வறண்ட சூழலில்␢ உனக்கு நிறைவளிப்பார்;␢ உன் எலும்புகளை வலிமையாக்குவார்;␢ நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும்,␢ ஒருபோதும் வற்றாத␢ நீரூற்றுபோலும் இருப்பாய்.⁾

12 ⁽உன் மக்கள் பண்டை நாளிலிருந்து␢ பாழடைந்து கிடப்பவற்றைக்␢ கட்டியெழுப்புவர்;␢ தலைமுறை தலைமுறையாக உள்ள␢ அடித்தளங்களின் மேல்␢ கட்டியெழுப்புவாய்;␢ தகர்ந்த மதிலைத்␢ திரும்பக் கட்டுபவன் என்றும்␢ குடியிருப்பதற்குத் தெருக்களைச்␢ சீர்படுத்துபவன் என்றும்␢ பெயர் பெறுவாய்.⁾

13 ⁽ஓய்வுநாளின் முறைமைகளினின்று␢ விலகிச் செல்லாது,␢ என் புனித நாளில்␢ உன் விருப்பம் போல் செய்யாதிருந்து,␢ ஓய்வு நாள் ‘மகிழ்ச்சியின் நாள்’ என்றும்␢ ‘ஆண்டவரின் மேன்மைமிகு␢ புனித நாள்’ எனவும் சொல்லி␢ அதற்கு மதிப்புத் தந்து,␢ உன் சொந்த வழிகளில் செல்லவோ␢ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ␢ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ␢ செய்யாதிருந்தால்,⁾

14 ⁽அப்பொழுது, ஆண்டவருக்கு␢ ஊழியம் புரியும்␢ மகிழ்ச்சியைப் பெறுவாய்;␢ நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில்␢ உன்னை வலம்வரச் செய்வேன்;␢ உன் மூதாதையாகிய யாக்கோபின்␢ உரிமைச் சொத்தின் மூலம்␢ உனக்கு உணவளிப்பேன்;␢ ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.⁾