1 ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.

2 ⁽காரிருளில் நடந்துவந்த மக்கள்␢ பேரொளியைக் கண்டார்கள்;␢ சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்␢ குடியிருப்போர்மேல்␢ சுடர் ஒளி உதித்துள்ளது.⁾

3 ⁽ஆண்டவரே! அந்த இனத்தாரைப்␢ பல்கிப் பெருகச் செய்தீர்;␢ அவர்கள் மகிழ்ச்சியை␢ மிகுதிப்படுத்தினீர்;␢ அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்␢ உம் திருமுன் அவர்கள்␢ அகமகிழ்கிறார்கள்;␢ கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது␢ அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.⁾

4 ⁽மிதியான் நாட்டுக்குச் செய்தது போல␢ அவர்களுக்குச் சுமையாக இருந்த␢ நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;␢ அவர்கள் தோளைப் புண்ணாக்கிய␢ தடியைத் தகர்த்துப் போட்டீர்;␢ அவர்களை ஒடுக்குவோரின்␢ கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.⁾

5 ⁽அமளியுற்ற போர்க்களத்தில்␢ போர்வீரன் அணிந்திருந்த␢ காலணிகளும், இரத்தக் கறைபடிந்த␢ ஆடைகள் அனைத்தும்␢ நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.⁾

6 ⁽ஏனெனில், ஒரு குழந்தை␢ நமக்குப் பிறந்துள்ளார்;␢ ஓர் ஆண்மகவு நமக்குத்␢ தரப்பட்டுள்ளார்;␢ ஆட்சிப்பொறுப்பு␢ அவர் தோள்மேல் இருக்கும்;␢ அவர் திருப்பெயரோ␢ ‘வியத்தகு ஆலோசகர்,␢ வலிமைமிகு இறைவன்,␢ என்றுமுள தந்தை,␢ அமைதியின் அரசர்’␢ என்று அழைக்கப்படும்.⁾

7 ⁽அவரது ஆட்சியின் உயர்வுக்கும்␢ அமைதி நிலவும் அவரது அரசின்␢ வளர்ச்சிக்கும் முடிவு இராது;␢ தாவீதின் அரியணையில் அமர்ந்து␢ தாவீதின் அரசை நிலைநாட்டுவார்;␢ இன்றுமுதல் என்றென்றும்␢ நீதியோடும் நேர்மையோடும்␢ ஆட்சிபுரிந்து அதை␢ நிலை பெயராது உறுதிப்படுத்துவார்;␢ படைகளின் ஆண்டவரது பேரார்வம்␢ இதைச் செய்து நிறைவேற்றும்.⁾

8 ⁽யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை␢ ஆண்டவர் அனுப்பியுள்ளார்;␢ அது இஸ்ரயேல்மேல் இறங்கித்␢ தன் செயலைச் செய்யும்.⁾

9 ⁽எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள்␢ ஆகிய அனைத்து மக்களும்␢ இதை அறிந்து கொள்வார்கள்.⁾

10 ⁽செருக்கினாலும் இதயத்தில் எழும்␢ இறுமாப்பினாலும்␢ அவர்கள் சொல்லுவதாவது:␢ “செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது:␢ எனினும், செதுக்கிய கற்களால்␢ நாங்கள் கட்டியெழுப்புவோம்.␢ காட்டத்தி மரங்கள்␢ வெட்டி வீழ்த்தப்பட்டன;␢ எனினும், அவற்றிற்குப் பதிலாகக்␢ கேதுரு மரங்களை வைப்போம்”.⁾

11 ⁽ஆதலால் ஆண்டவர்␢ இரட்சீனின் அதிகாரிகளை␢ அவர்களுக்கு எதிராய்க்␢ கிளர்ந்தெழச் செய்தார்;␢ அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.⁾

12 ⁽கிழக்கிலிருந்து சிரியரும்,␢ மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்␢ வந்தார்கள்;␢ தங்கள் வாயை விரிவாய்த்திறந்து␢ இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்;␢ இவையெல்லாம் நடந்தும்,␢ அவரது சீற்றம் தணியவிலலை;␢ ஓங்கிய அவரது சினக் கை␢ இன்னும் மடங்கவில்லை.⁾

13 ⁽தங்களை நொறுக்க வைத்தவரிடம்␢ மக்கள் திரும்பவில்லை;␢ படைகளின் ஆண்டவரைத்␢ தேடவுமில்லை.⁾

14 ⁽ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில்␢ உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை␢ அனைவரையும்,␢ ஒலிவமரக்கிளையையும் நாணலையும்␢ ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;⁾

15 ⁽முதியவரும், மதிப்புமிக்கவருமே␢ உயர்ந்தோர்;␢ பொய்யைப் போதிக்கும்␢ இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.⁾

16 ⁽இந்த மக்களை வழிநடத்தியோர்␢ அவர்களை நெறிபிறழச் செய்தனர்;␢ அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ␢ அழிந்துபோயினர்.⁾

17 ⁽ஆதலால், அவர்களுடைய␢ இளைஞரைக் குறித்து␢ என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை;␢ அவர்களிடையே வாழும் திக்கற்றோர்,␢ கைம்பெண்கள்மேல்␢ இரக்கம் காட்டவில்லை;␢ அவர்கள் அனைவரும்␢ இறைப்பற்று இல்லாதவர்கள்;␢ தீச்செயல் புரிபவர்கள்;␢ எல்லாரும் மதிகேட்டையே பேசினர்;␢ இவையெல்லாம் நடந்தும்␢ அவர் சீற்றம் தணியவில்லை;␢ ஓங்கிய அவரது சினக் கை␢ இன்னும் மடங்கவில்லை.⁾

18 ⁽கொடுமை தீயைப்போல்␢ கொழுந்து விட்டு எரிந்தது;␢ அது முட்புதர்களையும்␢ நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது;␢ காட்டின் அடர்ந்த பகுதிகளை␢ அது கொளுத்திவிட்டது;␢ அதனால் புகைமண்டலம் சுழன்று␢ மேலே எழுந்தது.⁾

19 ⁽படைகளின் ஆண்டவரது சினத்தால்␢ நாடு நெருப்புக்கு இரையானது;␢ மக்கள் நெருப்புக்கு␢ விறகைப் போல் ஆனார்கள்;␢ ஒருவரும் தம் அடுத்திருப்பாரை␢ விட்டு வைக்கவில்லை.⁾

20 ⁽அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப்␢ பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை;␢ இடப்புறம் இருப்பனவற்றை␢ எடுத்து விழுங்கியும்␢ மனம் நிறைவடையவில்லை;␢ ஒவ்வொருவரும் தம் குழந்தையின்␢ சதையைக் கூடத் தின்றனர்;⁾

21 ⁽மனாசே குடும்பத்தார்␢ எப்ராயிம் குடும்பத்தாரையும்␢ எப்ராயிம் குடும்பத்தார்␢ மனாசே குடும்பத்தாரையும்␢ கொன்று தின்றனர்;␢ இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து␢ யூதாவின் மேல் பாய்ந்தனர்;␢ இவையெல்லாம் நடந்தும்␢ அவரது சீற்றம் தணியவில்லை;␢ ஓங்கிய அவரது சினக் கை␢ இன்னும் மடங்கவில்லை;⁾

ஏசாயா 9 ERV IRV TRV