1 ⁽இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர்␢ உங்களுக்குக் கூறும் சொல்லைக்␢ கேளுங்கள்.⁾

2 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே;␢ வேற்றினங்களின் வழியைக்␢ கற்றுக் கொள்ளாதீர்;␢ வானத்தில் தோன்றும்␢ அடையாளங்களைக் கண்டு␢ கலங்காதீர்;␢ வேற்றினத்தாரே␢ அவற்றால் கலக்கமுறுவர்.⁾

3 ⁽வேற்றினங்கள் வழிபடும் சிலைகள்␢ வீணானவை;␢ அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட␢ மரத்தாலானவை;␢ கைவினைஞர் உளியால் செய்த␢ வேலைப்பாடுகள்.⁾

4 ⁽அவை பொன், வெள்ளியால்␢ அணி செய்யப்பட்டவை.␢ அசையாதபடி ஆணி,␢ சுத்தியல் கொண்டு␢ பொருத்தப் பெற்றவை.⁾

5 ⁽அவை வெள்ளரித் தோட்டத்துப்␢ பொம்மை போன்றவை;␢ அவற்றால் பேச முடியாது;␢ அவற்றைத் தூக்கிக்கொண்டுதான்␢ செல்லவேண்டும்.␢ அவற்றால் நடக்கவும் முடியாது.␢ அவை நன்மையும் செய்யா;␢ தீமையும் செய்யா;␢ அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.⁾

6 ⁽ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்;␢ நீர் பெரியவர்;␢ உமது பெயர் ஆற்றல் மிக்கது.⁾

7 ⁽மக்களினங்களின் மன்னரே!␢ உமக்கு அஞ்சாதவர் யார்?␢ அரசுரிமை உமதே;␢ வேற்றினத்தாரின் ஞானிகள்␢ அனைவரிலும்␢ அவர்களின் அரசுகள் அனைத்திலும்␢ உமக்கு நிகர் யாருமிலர்.⁾

8 ⁽அவர்கள் மூடர்களும்␢ முட்டாள்களுமாய் உள்ளனர்;␢ அவர்களது போதனையின் பொருளாம்␢ சிலைகள் மரக்கட்டைகளே.⁾

9 ⁽தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்,␢ ஊபாசிலிருந்து பொன்னும்␢ வந்து சேர்கின்றன.␢ அவை கைவினைஞரின்␢ வேலைப்பாடுகள்;␢ பொற்கொல்லனின்␢ கைத்திறனால் ஆனவை;␢ ஊதா, கருஞ்சிவப்பு␢ உடைகளைக் கொண்டவை.␢ அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற␢ கைவினைஞரின் வேலைப்பாடுகள்.⁾

10 ⁽ஆனால், ஆண்டவரே␢ உண்மையான கடவுள்!␢ அவரே வாழும் கடவுள்!␢ என்றும் ஆளும் அரசர்!␢ அவர் வெஞ்சினம் கண்டு␢ நிலம் நடுங்கும்;␢ அவர் கடுங்கோபத்தை␢ வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.⁾

11 ⁽நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு;␢ விண்ணையும் மண்ணையும்␢ உருவாக்காத அந்தத் தெய்வங்கள்␢ மண்ணின் மீதும் விண்ணின் கீழும்␢ இல்லாதொழியும்.⁾

12 ⁽அவரே தம் ஆற்றலால்␢ மண்ணுலகைப் படைத்தார்;␢ தம் ஞானத்தால்␢ பூவுலகை நிலை நாட்டினார்;␢ தம் கூர்மதியால்␢ விண்ணுலகை விரித்தார்.⁾

13 ⁽அவர் குரல் கொடுக்க␢ வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது;␢ மண்ணுலகின் எல்லையினின்று␢ மேகங்கள் எழச்செய்கிறார்;␢ மழை பொழியுமாறு␢ மின்னல் வெட்டச் செய்கிறார்;␢ தம் கிடங்குகளினின்று␢ காற்று வீசச் செய்கிறார்.⁾

14 ⁽மனிதர் யாவரும் மூடர்கள்,␢ அறிவிலிகள்;␢ கொல்லர் எல்லாரும்␢ தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;␢ அவர்களின் வார்ப்புப் படிமங்கள்␢ பொய்யானவை;␢ அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.⁾

15 ⁽அவை பயனற்றவை;␢ ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;␢ தம் தண்டனையின் காலத்தில்␢ அவை அழிந்துவிடும்.⁾

16 ⁽யாக்கோபின் பங்காய் இருப்பவரோ␢ இவற்றைப் போன்றவர் அல்லர்;␢ அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;␢ அவரது உரிமைச் சொத்தாகிய␢ இஸ்ரயேல் இனத்தை␢ உருவாக்கியவரும் அவரே;␢ படைகளின் ஆண்டவர் என்பது␢ அவர் பெயராகும்.⁾

17 ⁽முற்றுகையிடப்பட்டவனே,␢ தலையில் கிடக்கும் உன் பொருள்களை␢ மூட்டையாகக் கட்டு.⁾

18 ⁽ஏனெனில்,␢ ஆண்டவர் கூறுவது இதுவே;␢ நாட்டில் வாழ்வோரை␢ இத்தருணத்தில் வீசி எறிவேன்;␢ அவர்கள் என்னைக் கண்டுணருமாறு␢ அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.⁾

19 ⁽ஐயோ நான் நொறுங்குண்டேன்;␢ என் காயம் கொடியது;␢ நானோ “உண்மையில் இது ஒரு நோய்;␢ நான் இதைத் தாங்கியே␢ ஆக வேண்டும்” என்று␢ எண்ணிக்கொண்டேன்.⁾

20 ⁽என் கூடாரம் அழிக்கப்பட்டது;␢ அதன் கயிறுகளெல்லாம்␢ அறுத்தெறியப்பட்டன;␢ என் மக்கள் என்னைவிட்டுச்␢ சென்றுவிட்டனர்;␢ அவர்கள் இங்கு இல்லை;␢ என் கூடாரத்தை மீண்டும்␢ எழுப்புவார் எவருமிலர்;␢ அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.⁾

21 ⁽ஏனெனில், மேய்ப்பவர்கள்␢ மூடர்களாய் இருந்தனர்;␢ அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை;␢ எனவே, அவர்கள் வாழ்வு␢ வளம் பெறவில்லை;␢ அவர்களின் மந்தைகள் எல்லாம்␢ சிதறிப்போயின.⁾

22 ⁽குரல் ஒலி ஒன்று கேட்கின்றது;␢ அது அண்மையில் ஒலிக்கின்றது;␢ வடக்கு நாட்டிலிருந்து␢ பெருங் கொந்தளிப்பு எழுகின்றது;␢ யூதாவின் நகர்கள் பாழாகிக்␢ குள்ள நரிகளின்␢ வளையாகப் போகின்றன.⁾

23 ⁽ஆண்டவரே! நான் அறிவேன்;␢ மனிதர் செல்ல வேண்டிய வழி␢ அவர்களின் கையில் இல்லை;␢ நடப்பவன் காலடிப் போக்கும்␢ அவர்களின் அதிகாரத்தில் இல்லை.⁾

24 ⁽ஆண்டவரே!␢ உம் சினத்திற்கு ஏற்ப அன்று,␢ உன் நீதிக்கு ஏற்ப␢ என்னைத் திருத்தியருளும்.␢ இல்லையெனில்,␢ நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.⁾

25 ⁽உம்மை அறியாத␢ வேற்றினத்தார் மேலும்,␢ உம் பெயரைச் சொல்லி மன்றாடாத␢ குடும்பத்தார் மேலும்␢ உன் சீற்றத்தைக் காட்டியருளும்.␢ ஏனெனில், அவர்கள் யாக்கோபை␢ விழுங்கிவிட்டார்கள்;␢ விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்;␢ அவர் குடியிருப்பையும்␢ பாழாக்கிவிட்டார்கள்.⁾

எரேமியா 10 ERV IRV TRV