1 ⁽ஆண்டவரின் வாக்கு எனக்கு␢ அருளப்பட்டது:⁾

2 ⁽“நீ சென்று எருசலேம் நகரினர்␢ அனைவரும் கேட்கும் முறையில்␢ இவ்வாறு பறைசாற்று.␢ ஆண்டவர் கூறுவது இதுவே;␢ உன் இளமையின் அன்பையும்␢ மணமகளுக்குரிய காதலையும்␢ விதைக்கப்படாத பாலைநிலத்தில்␢ நீ என்னை எவ்வாறு␢ பின்பற்றினாய் என்பதையும்␢ நான் நினைவுகூர்கிறேன்.⁾

3 ⁽இஸ்ரயேல் ஆண்டவருக்கு␢ அர்ப்பணிக்கப்பட்டது;␢ அவரது அறுவடையின்␢ முதற்கனியாய் இருந்தது;␢ அதனை உண்டவர் அனைவரும்␢ குற்றவாளிகள் ஆயினர்;␢ அவர்கள்மேல்␢ தீமையே வந்து சேர்ந்தது,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

4 ⁽யாக்கோபின் வீட்டாரே,␢ இஸ்ரயேல் வீட்டின்␢ அனைத்துக் குடும்பத்தாரே,␢ ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.⁾

5 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ என்னை விட்டகன்று␢ வீணானவற்றைப் பின்பற்றி␢ வீணாகும் அளவுக்கு␢ உங்கள் தந்தையர் என்னிடம்␢ என்ன தவறு கண்டனர்?⁾

6 ⁽எகிப்து நாட்டிலிருந்து␢ நம்மை அழைத்து வந்தவரும்␢ பாழ்நிலமும்␢ படுகுழிகள் நிறைந்த நிலமும்␢ வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும்␢ யாருமே கடந்து செல்லாததும்,␢ யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில்␢ நம்மை நடத்தி வந்தவருமான␢ ஆண்டவர் எங்கே? என்று␢ அவர்கள் கேட்கவில்லையே!⁾

7 ⁽செழிப்பான நாட்டுக்கு␢ அதன் கனிகளையும்␢ நலன்களையும் நுகருமாறு␢ நான் உங்களை அழைத்து வந்தேன்.␢ நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து␢ அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்;␢ எனது உரிமைச் சொத்தை நீங்கள்␢ அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.⁾

8 ⁽குருக்கள், “ஆண்டவர் எங்கே?”␢ என்று கேட்கவில்லை;␢ திருச்சட்டத்தைப் போதிப்போர்␢ என்னை அறியவில்லை;␢ ஆட்சியாளர்* எனக்கு எதிராகக்␢ கலகம் செய்தனர்;␢ இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப்␢ பயனற்றவற்றைப் பின்பற்றினர்.⁾

9 ⁽ஆதலால் இன்னும் உங்களோடு␢ வழக்காடுவேன்” என்கிறார் ஆண்டவர்.␢ உங்கள் மக்களின் மக்களோடும்␢ வழக்காடுவேன்.⁾

10 ⁽சைப்ரசு நாட்டின்␢ கடற்கரைப் பகுதிகளுக்குக்␢ கடந்து சென்றுபாருங்கள்;␢ கேதாருக்கு ஆளனுப்பி␢ முழுத் தெளிவு பெறுங்கள்;␢ இது போன்ற செயல் உண்டோ␢ என்று பாருங்கள்.⁾

11 ⁽தங்கள் தெய்வங்கள்␢ தெங்வங்களே அல்ல எனினும்,␢ அவற்றினை மாற்றிக்கொண்ட␢ மக்களினம் உண்டா?␢ என் மக்களோ, என் மாட்சியைப்␢ பயனற்ற ஒன்றிற்காக␢ மாற்றிக் கொண்டனர்.⁾

12 ⁽வானங்களே இதைக் கண்டு␢ திடுக்கிடுங்கள்;␢ அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

13 ⁽ஏனெனில், என் மக்கள்␢ இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்;␢ பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய␢ என்னைப் புறக்கணித்தார்கள்;␢ தண்ணீர் தேங்காத,␢ உடைந்த குட்டைகளைத்␢ தங்களுக்கென்று␢ குடைந்து கொண்டார்கள்.⁾

14 ⁽இஸ்ரயேல் ஓர் அடிமையா?␢ வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா?␢ அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?⁾

15 ⁽அவனுக்கு எதிராக␢ இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து,␢ பெருமுழக்கம் செய்து␢ அவனது நாட்டைப் பாழடையச் செய்தன;␢ அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன;␢ அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.⁾

16 ⁽மெம்பிசு, தகபனேசு நகரினர்␢ உன் தலையை மழித்தனர்.⁾

17 ⁽உன் கடவுளாகிய ஆண்டவர்␢ உன்னை வழிநடத்திச் செல்லும்போதே␢ அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ␢ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?⁾

18 ⁽நைல் நதி நீரைக் குடிக்க␢ இப்போது நீ எகிப்துக்குப் போவதால்␢ உனக்கு வரும் பயன் என்ன?␢ யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க␢ அசீரியாவுக்குப் போவதால்␢ உனக்கு வரும் பயன் என்ன?⁾

19 ⁽உன் தீச்செயலே␢ உன்னைத் தண்டிக்கும்;␢ உன் பற்றுறுதியின்மையே␢ உன்னைக் கண்டிக்கும்;␢ உன் கடவுளாகிய ஆண்டவராம்␢ என்னைப் புறக்கணித்தது␢ தீயது எனவும் கசப்பானது எனவும்␢ கண்டுணர்ந்து கொள்.␢ என்னைப் பற்றிய அச்சமே␢ உன்னிடம் இல்லை, என்கிறார்␢ என் தலைவராகிய␢ படைகளின் ஆண்டவர்.⁾

20 ⁽நெடுங்காலத்துக்கு முன்பே␢ உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்;␢ உன் தளைகளை அறுத்துவிட்டாய்;␢ “நான் ஊழியம் செய்யேன்”␢ என்று சொன்னாய்.␢ உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும்,␢ பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும்␢ விலைமாதாகக் கிடந்தாயே!⁾

21 ⁽முற்றிலும் நல்ல கிளையினின்று␢ உயர் இனத் திராட்சைச் செடியாய்␢ உன்னை நட்டு வைத்தேன்;␢ நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட␢ காட்டுத் திராட்சைச் செடியாய்␢ மாறியது எப்படி?⁾

22 ⁽நீ உன்னை உவர் மண்ணினால்␢ கழுவினாலும்,␢ எவ்வளவு சவர்க்காரத்தைப்␢ பயன்படுத்தினாலும்,␢ உன் குற்றத்தின் கறை␢ என் கண்முன்னே இருக்கிறது,␢ என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.⁾

23 ⁽“நான் தீட்டுப்படவில்லை;␢ பாகால்களுக்குப்பின் திரியவில்லை” என␢ எப்படி நீ கூற முடியும்?␢ பள்ளத்தாக்கில் நீ சென்ற␢ பாதையைப் பார்;␢ நீ செய்தது என்ன என்று␢ அறிந்துகொள்;␢ இங்கும் அங்கும் விரைந்தோடும்␢ பெண் ஒட்டகம் நீ.⁾

24 ⁽பாலைநிலத்தில் பழகியதும்,␢ காம வேட்கையில்␢ மோப்பம் பிடிப்பதுமான␢ காட்டுக் கழுதை நீ!␢ அதன் காம வெறியை␢ யாரால் கட்டுப்படுத்த முடியும்?␢ அதனை வருந்தித் தேடத்␢ தேவையில்லை;␢ புணர்ச்சிக் காலத்தில்␢ அதனை எளிதில் காணலாம்.⁾

25 ⁽“கால் தேய ஓடாதே;␢ தொண்டை வறண்டுபோக விடாதே”␢ என்றால்,␢ நீயோ, “பயனில்லை.␢ நான் வேற்றுத் தெய்வங்கள்மேல்␢ மோகம் கொண்டேன்;␢ அவர்கள் பின்னே திரிவேன்” என்றாய்.⁾

26 ⁽திருடன் பிடிபடும்போது␢ மானக்கேடு அடைவது போல,␢ இஸ்ரயேல் வீட்டாரும்␢ அவர்களின் அரசர்களும்␢ தலைவர்களும் குருக்களும்␢ இறைவாக்கினர்களும்␢ மானக்கேடு அடைவார்கள்.⁾

27 ⁽ஒரு மரத்தை நோக்கி,␢ “நீயே என் தந்தை” என்பர்;␢ ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப்␢ பெற்றெடுத்தவள்” என்பர்.␢ எனக்கு முகத்தையல்ல,␢ முதுகையே காட்டுகின்றனர்;␢ ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில்␢ , “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர்.⁾

28 ⁽உனக்கென நீ செய்துகொண்ட␢ தெய்வங்கள் எங்கே?␢ உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில்,␢ முடிந்தால் அவை எழுந்து␢ உன்னை விடுவிக்கட்டுமே!␢ யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ,␢ அத்தனை தெய்வங்கள்␢ உன்னிடம் இருக்கின்றனவே!⁾

29 ⁽என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்?␢ நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க்␢ கலகம் செய்தவர்களே,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

30 ⁽நான் உங்கள் மக்களை␢ அடித்து நொறுக்கியது வீண்;␢ அவர்கள் திருந்தவில்லை;␢ சிங்கம் அழித்தொழிப்பதுபோல␢ உங்கள் வாளே உங்கள்␢ இறைவாக்கினரை வீழ்த்தியது.⁾

31 ⁽இத்தலைமுறையினரே!␢ ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள்.␢ நான் இஸ்ரயேலுக்குப்␢ பாலைநிலமாய் இருந்தேனா?␢ அல்லது இருள்சூழ் நிலமாய்␢ இருந்தேனா?␢ “நாங்கள் விருப்பம் போல்␢ சுற்றித் திரிவோம்;␢ இனி உம்மிடம் வரமாட்டோம்” என்று␢ என் மக்கள் ஏன் கூறினார்கள்?⁾

32 ⁽ஒரு கன்னிப் பெண்␢ தன் நகைகளை மறப்பாளோ?␢ மணப்பெண் தன் திருமண உடையை␢ மறப்பதுண்டோ?␢ என் மக்களோ என்னை␢ எண்ணிறந்த நாள்களாய்␢ மறந்து விட்டார்கள்.⁾

33 ⁽காதலரை அடையும் வழிகளைச்␢ சிறப்பாய் வகுத்துள்ளாய்;␢ ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட␢ உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.⁾

34 ⁽மாசற்ற வறியவரின் இரத்தக்கறை␢ உன் மேலாடை விளிம்புகளில்␢ காணப்படுகின்றது;␢ அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை␢ நீ கண்டாயா?⁾

35 ⁽இவை அனைத்தையும்␢ நீ செய்திருந்தும்␢ நீயோ, “நான் மாசற்றவள்;␢ அவர் சினம் என்னைவிட்டு␢ அகன்று விட்டது உறுதி” என்கிறாய்.␢ “பாவம் செய்யவில்லை” என்று␢ நீ கூறியதால்,␢ நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.⁾

36 ⁽ஏன் இவ்வளவு எளிதாக␢ உன் வழிகளை␢ மாற்றிக் கொள்கின்றாய்?␢ அசீரியாவால்␢ நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல்␢ எகிப்தினாலும்␢ மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!⁾

37 ⁽உன் தலைமேல் கைகளை␢ வைத்துக் கொண்டுதான்␢ அங்கிருந்து திரும்பி வருவாய்;␢ ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை␢ ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்;␢ அவர்களால் உனக்குப்␢ பயன் ஏதும் இல்லை.”⁾

எரேமியா 2 ERV IRV TRV