1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி;

2 ⁽இதைப்போன்ற பலவற்றை␢ நான் கேட்டதுண்டு;␢ “புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.⁾

3 ⁽உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா?␢ வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?⁾

4 ⁽என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;␢ என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,␢ உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,␢ உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.⁾

5 ⁽ஆயினும், என் சொற்களால்␢ உங்களை வலுப்படுத்துவேன்;␢ என் உதட்டின் ஆறுதல்␢ உங்கள் வலியைக் குறைக்குமே!⁾

6 ⁽நான் பேசினாலும் என் வலி குறையாது;␢ அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.⁾

7 ⁽உண்மையில், கடவுளே!␢ இப்போது என்னை உளுத்திட வைத்தீர்;␢ என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.⁾

8 ⁽நீர் என்னை இளைக்கச் செய்தீர்;␢ அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று;␢ என் மெலிவு எழுந்து␢ எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.⁾

9 ⁽அவர் என்னை வெறுத்தார்;␢ வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்;␢ என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்;␢ என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.⁾

10 ⁽மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;␢ ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;␢ எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.⁾

11 ⁽இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்.␢ கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;⁾

12 ⁽நலமுடன் இருந்தேன் நான்;␢ தகர்த்தெறிந்தார் என்னை அவர்;␢ பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;␢ என்னையே தம் இலக்காக ஆக்கினார்.⁾

13 ⁽அவர் தம் வில்வீரர்␢ என்னை வளைத்துக் கொண்டனர்;␢ என் ஈரலை அவர் பிளந்து விட்டார்;␢ ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை␢ மண்ணில் சிந்தினார்.⁾

14 ⁽முகத்தில் அடியடியென்று␢ என்னை அடித்தார்;␢ போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.⁾

15 ⁽சாக்கு உடையை நான் என் உடலுக்குத்␢ தைத்துக் கொண்டேன்;␢ புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.⁾

16 ⁽அழுதழுது என் முகம் சிவந்தது;␢ என் கண்களும் இருண்டு போயின,⁾

17 ⁽இருப்பினும், வன்செயல்␢ என் கையில் இல்லை;␢ மாசு என் மன்றாட்டில் இல்லை.⁾

18 ⁽மண்ணே! என் குருதியை மறைக்காதே;␢ என் கூக்குரலைப் புதைக்காதே.⁾

19 ⁽இப்பொழுதும் இதோ!␢ என் சான்று விண்ணில் உள்ளது;␢ எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.⁾

20 ⁽என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே!␢ கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.⁾

21 ⁽ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல்,␢ அவர் மனிதர் சார்பாகக்␢ கடவுளிடம் பரிந்து பேசுவார்.⁾

22 ⁽இன்னும் சில ஆண்டுகளே உள்ளன;␢ பிறகு திரும்ப வரவியலா␢ வழியில் செல்வேன்.⁾

யோபு 16 ERV IRV TRV