1 ⁽ஆனால், இன்று என்னை,␢ என்னைவிட இளையோர்␢ ஏளனம் செய்கின்றனர்;␢ அவர்களின் தந்தையரை என் மந்தையின்␢ நாய்களோடு இருத்தவும் உடன் பட்டிரேன்.⁾

2 ⁽எனக்கு அவர்களின் கைவன்மையால்␢ என்ன பயன்? அவர்கள்தாம்␢ ஆற்றல் இழந்து போயினரே?⁾

3 ⁽அவர்கள் பட்டினியாலும் பசியாலும்␢ மெலிந்தனர்; வறண்டு, இருண்டு␢ அழிந்த பாலைக்கு ஓடினர்.⁾

4 ⁽அவர்கள் உப்புக்கீரையைப்␢ புதரிடையே பறித்தார்கள்;␢ காட்டுப் பூண்டின் வேரே அவர்களின் உணவு.⁾

5 ⁽மக்கள் அவர்களைத்␢ தம்மிடமிருந்து விரட்டினர்;␢ கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல்␢ அவர்களுக்குச் செய்தனர்.⁾

6 ⁽ஓடைகளின் உடைப்புகளிலும்␢ நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும்␢ அவர்கள் வாழ்ந்தனர்.⁾

7 ⁽புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்;␢ முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.⁾

8 ⁽மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்;␢ அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.⁾

9 ⁽இப்பொழுதோ, அவர்களுக்கு நான்␢ வசைப்பாட்டு ஆனேன்;␢ அவர்களுக்கு நான் பழமொழியானேன்.⁾

10 ⁽என்னை அவர்கள் அருவருக்கின்றனர்;␢ என்னைவிட்டு விலகிப் போகின்றனர்;␢ என்முன் காறித் துப்பவும்␢ அவர்கள் தயங்கவில்லை.⁾

11 ⁽என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி,␢ என்னைத் தாழ்த்தியதால்,␢ என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.⁾

12 ⁽என் வலப்பக்கம் கும்பல் கூடுகின்றது;␢ என்னை நெட்டித் தள்ளுகின்றது;␢ அழிவுக்கான வழிகளை␢ எனக்கெதிராய் வகுத்தது.⁾

13 ⁽எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்;␢ என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்;␢ அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.⁾

14 ⁽அகன்ற உடைப்பில் நுழைவது போலப்␢ பாய்கின்றனர்; இடிபாடுகளுக்கு இடையில்␢ அலைபோல் வருகின்றனர்.⁾

15 ⁽பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது;␢ என் பெருமை காற்றோடு போயிற்று;␢ முகிலென மறைந்தது என் சொத்து.⁾

16 ⁽இப்பொழுதோ, என் உயிர்␢ போய்க்கொண்டே இருக்கின்றது;␢ இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.⁾

17 ⁽இரவு என் எலும்புகளை உருக்குகின்றது;␢ என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை.⁾

18 ⁽நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது;␢ கழுத்துப்பட்டை போல்␢ என்னை ஒட்டிக்கொண்டது.⁾

19 ⁽கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்;␢ புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.⁾

20 ⁽நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.␢ ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை,␢ நான் உம்முன் நின்றேன்;␢ நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.⁾

21 ⁽கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்;␢ உம் கை வல்லமையால்␢ என்னைத் துன்புறுத்துகின்றீர்;⁾

22 ⁽என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்;␢ புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.⁾

23 ⁽ஏனெனில், சாவுக்கும்,␢ வாழ்வோர் அனைவரும் கூடுமிடத்திற்கும்␢ என்னைக் கொணர்வீர் என அறிவேன்.⁾

24 ⁽இருப்பினும், அழிவின் நடுவில்␢ ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது,␢ அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது,␢ எவர் அவருக்கு எதிராகக்␢ கையை உயர்த்துவார்?⁾

25 ⁽அவதிபட்டவருக்காக நான் அழவில்லையா?␢ ஏழைக்காக என் உள்ளம் இளகவில்லையா?⁾

26 ⁽நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது.␢ ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.⁾

27 ⁽என் குலை நடுங்குகிறது, அடங்கவில்லை;␢ இன்னலின் நாள்கள்␢ எனை எதிர்கொண்டு வருகின்றன.⁾

28 ⁽கதிரோன் இன்றியும்␢ நான் கருகித் திரிகிறேன்; எழுகிறேன்;␢ மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.⁾

29 ⁽குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்;␢ நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.⁾

30 ⁽என் தோல் கருகி உரிகின்றது;␢ என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.⁾

31 ⁽என் யாழின் ஓசை புலம்பலாயிற்று;␢ என் குழலின் ஒலி அழுகையாயிற்று.⁾

யோபு 30 ERV IRV TRV