1 ⁽உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு␢ எதிராய் வருகின்றான்; கோட்டை␢ மதில்களில் வீரர்களை நிறுத்து;␢ வழிகளில் காவலர்களை அமர்த்து;␢ உம் இடையே வரிந்து கட்டிக்கொள்;␢ உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.⁾

2 ⁽இஸ்ரயேலின் மேன்மை போலவே␢ யாக்கோபின் மேன்மையை␢ ஆண்டவர் மீண்டும்␢ நிலைநாட்டுகின்றார்;␢ கொள்ளைக்காரர்கள்␢ அவர்களைக் கொள்ளையடித்தனர்;␢ அவர்களின் திராட்சைக் கொடிகளையும்␢ அழித்துப்போட்டனர்.⁾

3 ⁽எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள்␢ சிவப்பானவை;␢ அவனுடைய போர்வீரர்␢ செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்;␢ போர் அணியில் இயங்கும்␢ தேர்ப்படையிலிருந்து␢ தீப்பொறி பறக்கின்றது;␢ குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன.⁾

4 ⁽வெறிபிடித்தவனைப்போல்␢ தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன;␢ திறந்த வெளியில் அவை␢ அங்குமிங்குமாய் விரைகின்றன;␢ தீப்பந்தங்களைப்போலச்␢ சுடர்விடுகின்றன;␢ மின்னலைப்போலப் பாய்கின்றன.⁾

5 ⁽படைத்தலைவர்கள்␢ அழைக்கப்படுகின்றார்கள்;␢ அவர்கள் செல்லும்போது␢ இடறுகின்றார்கள்;␢ கோட்டை மதில் நோக்கி␢ விரைந்தோடுகின்றார்கள்;␢ காப்புக் கருவி அமைத்தாயிற்று.⁾

6 ⁽ஆறுகளின் மதகுகள்␢ திறந்துவிடப்பட்டன.␢ அரண்மனை இடிந்து கரைந்தது.⁾

7 ⁽அரசி அணிகள் களையப்பெற்று␢ நாடு கடத்தப்படுகின்றாள்;␢ அவளுடைய பணிப்பெண்கள்␢ புறாக்களைப்போலப்␢ பெருமூச்செறிந்து,␢ மாரடித்துப் புலம்புகின்றார்கள்.⁾

8 ⁽உடைத்துக்கொண்ட␢ குளம்போல ஆனது நினிவே நகர்;␢ ‘நில்லுங்கள், நில்லுங்கள்!’ என␢ அவர்கள் அலறுகிறார்கள்;␢ ஆனால் எவனும்␢ திரும்பிப் பார்க்கிறதில்லை.⁾

9 ⁽வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்;␢ பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்;␢ கருவூலங்கள் மிகப்பெரியவை;␢ அங்குள்ள விலையுயர்ந்த␢ பொருள்களுக்கு அளவே இல்லை.⁾

10 ⁽வெறுமை! பாழ்! அழிவு!␢ உள்ளம் சோர்ந்துவிட்டது;␢ கால்கள் தள்ளாடுகின்றன;␢ திகில் அனைவரையும்␢ முற்றிலும் ஆட்கொள்கிறது;␢ முகங்களெல்லாம் வெளிறிப் போகின்றன.⁾

11 ⁽சிங்கங்களின் குகை எங்கே?␢ சிங்கக் குட்டிகள் உலாவும்␢ உறைவிடம் எங்கே?␢ அச்சமின்றி இருந்த␢ தன் குட்டிகளுக்கு அது␢ இரை தேடிக்கொணர்ந்து␢ போட்ட இடம் இதுவன்றோ?⁾

12 ⁽சிங்கம் தன் குட்டிகளுக்கும்␢ பெண் சிங்கத்திற்கும்␢ தேவையான அளவு இரையைப்␢ பீறிக் கிழித்து,␢ இரையினால் தன் உறைவிடங்களையும்,␢ கிழித்த சதையால்␢ தன் குகைகளையும் நிரப்பிற்று.⁾

13 ⁽இதோ! படைகளின்␢ ஆண்டவர் கூறுகிறார்:␢ உனக்கு எதிராக நான் எழும்புவேன்;␢ உன் தேர்களைச்␢ சுட்டுச் சாம்பலாக்குவேன்;␢ உன் இளம் சிங்கங்கள்␢ வாளுக்கு இரையாகும்;␢ நாட்டில் உனக்கு␢ இரை இல்லாதபடி செய்வேன்;␢ உன் தூதர்களின் குரலை␢ இனி யாரும் கேட்கமாட்டார்கள்.⁾