1 ⁽அல்லேலூயா! ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்!␢ என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு!⁾

2 ⁽ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை␢ யாரால் இயம்ப இயலும்?␢ ஆவர்தம் புகழை␢ யாரால் விளம்பக் கூடும்?⁾

3 ⁽நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்!␢ எப்போதும் நேரியதே செய்வோர்␢ பேறுபேற்றோர்!⁾

4 ⁽ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது␢ இரக்கம் காட்டும்போது␢ என்னை நினைவு கூரும்!␢ அவர்களை நீர் விடுவிக்கும்போது␢ எனக்கும் துணைசெய்யும்!⁾

5 ⁽நீர் தேர்ந்தெடுத்த மக்களின்␢ நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்;␢ உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில்␢ நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்!␢ அப்போது, உமது உரிமைச் சொத்தான␢ மக்களோடு உம்மைப் போற்றிட இயலும்.⁾

6 ⁽எங்கள் மூதாதையரின் வழிநடந்து,␢ நாங்களும் பாவம் செய்தோம்;␢ குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.⁾

7 ⁽எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த␢ வியத்தகு செயல்களைப் பற்றிச்␢ சிந்திக்கவில்லை;␢ உமது மாபெரும் பேரன்பை␢ அவர்கள் நினைவில் கொள்ளவில்லை;␢ மாறாக உன்னதமானவரை எதிர்த்துச்␢ செங்கடல் ஓரத்தில்* கலகம் செய்தனர்.⁾

8 ⁽அவரோ தமது பெயரின் பொருட்டு␢ அவர்களை விடுவித்தார்;␢ இவ்வாறு அவர் தமது வலிமையை␢ வெளிப்படுத்தினார்.⁾

9 ⁽அவர் செங்கடலை அதட்டினார்;␢ அது உலர்ந்து போயிற்று;␢ பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல்␢ அவர்களை ஆழ்கடல் வழியே␢ நடத்திச்சென்றார்.⁾

10 ⁽எதிரியின் கையினின்று␢ அவர்களை விடுவித்தார்;␢ பகைவரின் பிடியினின்று␢ அவர்களை மீட்டார்.⁾

11 ⁽அவர்களுடைய எதிரிகளைக்␢ கடல்நீர் மூழ்கடித்தது;␢ அவர்களுள் ஒருவர்கூட␢ எஞ்சியிருக்கவில்லை.⁾

12 ⁽அப்பொழுது, அவர்கள்␢ அவருடைய வாக்குறுதிகளில்␢ நம்பிக்கை வைத்தார்கள்;␢ அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.⁾

13 ⁽ஆயினும், அவர் செய்தவற்றை␢ அவர்கள் விரைவிலேயே␢ மறந்துவிட்டார்கள்;␢ அவரது அறிவுரைக்காக␢ அவர்கள் காத்திருக்கவில்லை.⁾

14 ⁽பாலைநிலத்தில் அவர்கள்␢ பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள்.␢ பாழ்வெளியில் அவர்கள்␢ இறைவனைச் சோதித்தார்கள்.⁾

15 ⁽அவர்கள் கேட்டதை␢ அவர் அவர்களுக்குச் கொடுத்தார்;␢ அவர்களின் உயிரை அழிக்குமாறு␢ அவர்கள்மீது நோயை அனுப்பினார்.⁾

16 ⁽பாளையத்தில் இருக்கும்போது␢ மோசேயின்மீதும்,␢ ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற␢ ஆரோன்மீதும்,␢ அவர்கள் பொறாமை கொண்டார்கள்.⁾

17 ⁽நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது;␢ அபிராமின் கும்பலை␢ அப்படியே புதைத்துவிட்டது.⁾

18 ⁽அக்கும்பலிடையே நெருப்பு␢ கொழுந்துவிட்டு எரிந்தது;␢ தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது.⁾

19 ⁽அவர்கள் ஓரேபில் ஒரு␢ கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்;␢ வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;⁾

20 ⁽தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக,␢ புல்தின்னும் காளையின்␢ உருவத்தைச் செய்து கொண்டனர்;⁾

21 ⁽தங்களை விடுவித்த␢ இறைவனை மறந்தனர்;␢ எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;⁾

22 ⁽காம் நாட்டில் அவர் செய்த␢ வியத்தகு செயல்களை மறந்தனர்;␢ செங்கடலில் அவர் செய்த␢ அச்சுறுத்தும் செயல்களையும்␢ மறந்தனர்.⁾

23 ⁽ஆகையால், அவர்களை அவர்␢ அழித்துவிடுவதாகக் கூறினார்;␢ ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட␢ மோசே, அவர்முன்␢ உடைமதில் காவலர் போல் நின்று␢ அவரது கடுஞ்சினம் அவர்களை␢ அழிக்காதவாறு தடுத்தார்.⁾

24 ⁽அருமையான நாட்டை␢ அவர்கள் இகழ்ந்தார்கள்;␢ அவரது வாக்குறுதியில்␢ நம்பிக்கை கொள்ளவில்லை.⁾

25 ⁽அவர்கள் தங்களின் கூடாரங்களில்␢ முறுமுறுத்தார்கள்;␢ ஆண்டவரின் குரலுக்குச்␢ செவிகொடுக்கவில்லை.⁾

26 ⁽ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத்␢ தம் கையை ஓங்கி␢ ‘நான் உங்களைப் பாலைநிலத்தில்␢ வீழ்ச்சியுறச் செய்வேன்;⁾

27 ⁽உங்கள் வழிமரபினரை␢ வேற்றினங்களிடையிலும்␢ அன்னிய நாடுகளிலும்␢ சிதறடிப்பேன்’ என்றார்.⁾

28 ⁽பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப்␢ பற்றிக் கொண்டார்கள்.␢ உயிரற்ற தெய்வங்களுக்குப்␢ பலியிட்டவற்றை உண்டார்கள்;⁾

29 ⁽இவ்வாறு தங்கள் செய்கைகளினால்␢ அவருக்குச் சினமூட்டினார்கள்;␢ ஆகவே, கொள்ளைநோய்␢ அவர்களிடையே பரவிற்று.⁾

30 ⁽பினகாசு கொதித்தெழுந்து␢ தலையிட்டதால்␢ கொள்ளைநோய் நீங்கிற்று.⁾

31 ⁽இதனால், தலைமுறை தலைமுறையாக␢ என்றென்றும், அவரது செயல்␢ நீதியாகக் கருதப்பட்டது.⁾

32 ⁽மெரிபாவின் ஊற்றினருகில்␢ அவருக்குச் சினமூட்டினார்கள்.␢ அவர்களின் பொருட்டு␢ மோசேக்கும் தீங்கு நேரிட்டது.⁾

33 ⁽மோசேக்கு அவர்கள்␢ மனக்கசப்பை ஏற்படுத்தியதால்␢ அவர் முன்பின் பாராது பேசினார்.⁾

34 ⁽ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக,␢ மக்களினங்களை அவர்கள்␢ அழிக்கவில்லை.⁾

35 ⁽வேற்றினத்தாரோடு கலந்துறவாடி,␢ அவர்களின் வழக்கங்களைக்␢ கற்றுக்கொண்டனர்;⁾

36 ⁽அவர்களின் தெய்வச் சிலைகளைத்␢ தொழுதனர்; அவையே␢ அவர்களுக்குக் கண்ணிகளாயின.⁾

37 ⁽அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப்␢ பேய்களுக்குப் பலியிட்டனர்;⁾

38 ⁽மாசற்ற இரத்தத்தை,␢ தங்கள் புதல்வர் புதல்வியரின்␢ இரத்தத்தைச் சிந்தினர்;␢ கானான் நாட்டுத்␢ தெய்வங்களின் சிலைகளுக்கு␢ அவர்களைப் பலியிட்டார்கள்;␢ அவர்களின் இரத்தத்தால்␢ நாடு தீட்டுப்பட்டது.⁾

39 ⁽அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக்␢ கறைப்படுத்திக் கொண்டனர்;␢ தங்கள் செயல்கள் மூலம்␢ வேசித்தனம் செய்தனர்.⁾

40 ⁽எனவே, ஆண்டவரின் சினம்␢ அவர்தம் மக்களுக்கெதிராகப்␢ பற்றியெரிந்தது;␢ தமது உரிமைச் சொத்தை␢ அவர் அருவருத்தார்.⁾

41 ⁽வேற்றினத்தாரின் கையில்␢ அவர் அவர்களை ஒப்படைத்தார்;␢ அவர்களை வெறுத்தோரே␢ அவர்களை ஆட்சி செய்தனர்.⁾

42 ⁽அவர்கள் எதிரிகள்␢ அவர்களை ஒடுக்கினர்;␢ தங்கள் கையின்கீழ்␢ அவர்களைத் தாழ்த்தினர்.⁾

43 ⁽பன்முறை அவர்␢ அவர்களை விடுவித்தார்;␢ அவர்களோ திட்டமிட்டே␢ அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்;␢ தங்கள் தீச்செயல்களினால்␢ அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.⁾

44 ⁽எனினும் அவர் அவர்களது␢ மன்றாட்டுக்குச் செவிசாய்த்து,␢ அவர்களது துன்பத்தைக் கண்டு␢ மனமிரங்கினார்.⁾

45 ⁽அவர்களுக்கு உதவுமாறு,␢ அவர் தமது உடன்படிக்கையை␢ நினைவு கூர்ந்தார்;␢ தமது பேரன்பிற்கேற்பக்␢ கழிவிரக்கம் கொண்டார்;⁾

46 ⁽அவர்களைச் சிறைசெய்த␢ அனைவர் முன்னிலையிலும்␢ அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.⁾

47 ⁽எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!␢ எங்களை விடுவித்தருளும்;␢ வேற்று நாடுகளினின்று␢ எங்களை ஒன்று சேர்த்தருளும்;␢ அப்பொழுது நாங்கள்␢ உமது திருப்பெயருக்கு␢ நன்றி செலுத்துவோம்;␢ உம்மைப் புகழ்வதில்␢ பெருமை கொள்வோம்.⁾

48 ⁽இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்␢ ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக!␢ மக்கள் அனைவரும்␢ ‘ஆமென்’ எனச் சொல்வார்களாக!␢ அல்லேலூயா!⁾

சங்கீதம் 106 ERV IRV TRV