1 ⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்.␢ ஏனெனில் அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

2 ⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!⁾

3 ⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!⁾

4 ⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ அனைவரும் சாற்றுவார்களாக!⁾

5 ⁽நெருக்கடியான வேளையில் நான்␢ ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்;␢ ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து␢ என்னை விடுவித்தார்.⁾

6 ⁽ஆண்டவர் என் பக்கம் இருக்க␢ நான் ஏன் அஞ்ச வேண்டும்?␢ மனிதர் எனக்கு எதிராக␢ என்ன செய்ய முடியும்?⁾

7 ⁽எனக்குத் துணை செய்யும் ஆண்டவர்␢ என் பக்கம் உள்ளார்;␢ என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக்␢ கண்ணாரக் காண்பேன்.⁾

8 ⁽மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,␢ ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!⁾

9 ⁽உயர்குடியினர் மீது␢ நம்பிக்கை வைப்பதைவிட,␢ ஆண்டவரிடம்␢ அடைக்கலம் புகுவதே நலம்!⁾

10 ⁽வேற்றினத்தார் அனைவரும்␢ என்னைச் சூழ்ந்து கொண்டனர்;␢ ஆண்டவர் பெயரால்␢ அவர்களை அழித்துவிட்டேன்.⁾

11 ⁽எப்பக்கமும் அவர்கள் என்னைச்␢ சுற்றி வளைத்துக்கொண்டனர்;␢ ஆண்டவர் பெயரால்␢ அவர்களை அழித்துவிட்டேன்.⁾

12 ⁽தேனீக்களைப்போல் அவர்கள்␢ என்னைச் சூழ்ந்து கொண்டனர்;␢ நெருப்பிலிட்ட முட்களைப்போல்␢ அவர்கள் சாம்பலாயினர்;␢ ஆண்டவரின் பெயரால் அவர்களை␢ அழித்துவிட்டேன்.⁾

13 ⁽அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி␢ வீழ்த்த முயன்றனர்; ஆனால்,␢ ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.⁾

14 ⁽ஆண்டவரே என் ஆற்றல்;␢ என் பாடல்; என் மீட்பும் அவரே.⁾

15 ⁽நீதிமான்களின் கூடாரங்களில்␢ வெற்றியின் மகிழ்ச்சிக்குரல்␢ ஒலிக்கின்றது;␢ ஆண்டவரது வலக்கை␢ வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.⁾

16 ⁽ஆண்டவரது வலக்கை␢ உயர்ந்தோங்கி உள்ளது;␢ ஆண்டவரது வலக்கை␢ வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.⁾

17 ⁽நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;␢ ஆண்டவரின் செயல்களை␢ விரித்துரைப்பேன்;⁾

18 ⁽கண்டித்தார், ஆண்டவர்␢ என்னைக் கண்டித்தார்; ஆனால்␢ சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.⁾

19 ⁽நீதிமான்கள் செல்லும் வாயில்களை␢ எனக்குத் திறந்து விடுங்கள்;␢ அவற்றினுள் நுழைந்து நான்␢ ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.⁾

20 ⁽ஆண்டவரது வாயில் இதுவே!␢ இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.⁾

21 ⁽என் மன்றாட்டை நீர் கேட்டதால்,␢ எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.⁾

22 ⁽கட்டுவோர் புறக்கணித்த கல்லே␢ கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!⁾

23 ⁽ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!␢ நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!⁾

24 ⁽ஆண்டவர் தோற்றுவித்த␢ வெற்றியின் நாள் இதுவே;␢ இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.⁾

25 ⁽ஆண்டவரே! மீட்டருளும்!␢ ஆண்டவரே! வெற்றிதாரும்!⁾

26 ⁽ஆண்டவரின் பெயரால் வருபவர்␢ ஆசி பெற்றவர்!␢ ஆண்டவரது இல்லத்தினின்று␢ உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.⁾

27 ⁽ஆண்டவரே இறைவன்;␢ அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;␢ கிளைகளைக் கையிலேந்தி␢ விழாவினைத் தொடங்குங்கள்;␢ பீடத்தின் கொம்புகள்வரை␢ பவனியாகச் செல்லுங்கள்.⁾

28 ⁽என் இறைவன் நீரே!␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;␢ என் கடவுளே!␢ உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.⁾

29 ⁽ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில், அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾