1 ⁽ஆண்டவர்மீது நம்பிக்கை␢ வைத்துள்ளோர்␢ சீயோன் மலைபோல் என்றும்␢ அசையாது இருப்பர்.⁾

2 ⁽எருசலேமைச் சுற்றிலும்␢ மலைகள் இருப்பதுபோல,␢ ஆண்டவர் இப்போதும் எப்போதும்␢ தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.⁾

3 ⁽நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்␢ பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;␢ இல்லையெனில் நல்லாரும்␢ பொல்லாதது செய்ய நேரிடும்.⁾

4 ⁽ஆண்டவரே! நல்லவர்களுக்கும்␢ நேரிய இதயமுள்ளவர்களுக்கும்␢ நீர் நன்மை செய்தருளும்.⁾

5 ⁽கோணல் வழிநோக்கித் திரும்புவோரை␢ ஆண்டவர் தீயவரோடு சேர்த்து␢ இழுத்துச் செல்வார்.␢ இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!⁾