1 ⁽ஆண்டவரே! தீயோரிடமிருந்து␢ என்னை விடுவியும்;␢ வன்செயல் செய்வோரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்.⁾

2 ⁽அவர்கள் தம் மனத்தில்␢ தீயனவற்றை திட்டமிடுகின்றனர்;␢ நாள்தோறும் சச்சரவுகளைக்␢ கிளப்பி விடுகின்றனர்.⁾

3 ⁽அவர்கள் பாம்பெனத் தம் நாவைக்␢ கூர்மையாக்கிக்கொள்கின்றனர்;␢ அவர்களது உதட்டில் உள்ளது␢ விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)⁾

4 ⁽ஆண்டவரே! தீயோரின் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ கொடுமை செய்வோரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்;␢ அவர்கள் என் காலை␢ வாரிவிடப் பார்க்கின்றார்கள்.⁾

5 ⁽செருக்குற்றோர் எனக்கெனக்␢ கண்ணியை மறைவாக வைக்கின்றனர்;␢ தம் கயிறுகளால்␢ எனக்கு சுருக்கு வைக்கின்றனர்; (சேலா)⁾

6 ⁽நானோ ஆண்டவரை நோக்கி␢ இவ்வாறு வேண்டினேன்;␢ நீரே என் இறைவன்!␢ ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக␢ நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.⁾

7 ⁽என் தலைவராகிய ஆண்டவரே!␢ எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே!␢ போர் நடந்த நாளில் என் தலையை␢ மறைத்துக் காத்தீர்!⁾

8 ⁽ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை␢ நிறைவேற்றாதேயும்; அவர்களின்␢ சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும்.␢ இல்லையெனில், அவர்கள் ஆணவம்␢ கொள்வார்கள். (சேலா)⁾

9 ⁽என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன்␢ நடக்கின்றார்கள்;␢ அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை␢ அவர்கள்மேலே விழுவதாக!⁾

10 ⁽நெருப்புத் தழல்␢ அவர்கள்மேல் விழுவதாக!␢ மீளவும் எழாதபடி படுகுழியில்␢ தள்ளப்படுவார்களாக!⁾

11 ⁽புறங்கூறும் நாவுடையோர் உலகில்␢ நிலைத்து வாழாதிருப்பராக!␢ வன்செயல் செய்வாரைத்␢ தீமை விரட்டி வேட்டையாடுவதாக!⁾

12 ⁽ஏழைகளின் நீதிக்காக␢ ஆண்டவர் வழக்காடுவார் எனவும்␢ எளியவர்களுக்கு நீதி வழங்குவார்␢ எனவும் அறிவேன்.⁾

13 ⁽மெய்யாகவே, நீதிமான்கள்␢ உமது பெயருக்கு␢ நன்றி செலுத்துவார்கள்;␢ நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.⁾