1 ⁽ஆண்டவரே என் ஒளி;␢ அவரே என் மீட்பு;␢ யாருக்கு நான் அஞ்சவேண்டும்?␢ ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;␢ யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?⁾

2 ⁽தீயவர் என் உடலை விழுங்க␢ என்னை நெருங்குகையில்,␢ என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே␢ இடறி விழுந்தார்கள்.⁾

3 ⁽எனக்கெதிராக ஒரு படையே␢ பாளையமிறங்கினும்,␢ என் உள்ளம் அஞ்சாது;␢ எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,␢ நான் நம்பிக்கையோடிருப்பேன்.⁾

4 ⁽நான் ஆண்டவரிடம்␢ ஒரு விண்ணப்பம் செய்தேன்;␢ அதையே நான் நாடித் தேடுவேன்;␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ என் வாழ்நாள் எல்லாம்␢ நான் குடியிருக்க வேண்டும்,␢ ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; § அவரது கோவிலில் அவரது␢ திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.⁾

5 ⁽ஏனெனில், கேடுவரும் நாளில்␢ அவர் என்னைத்␢ தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;␢ தம் கூடாரத்தினுள்ளே␢ என்னை ஒளித்து வைப்பார்;␢ குன்றின்மேல் என்னைப்␢ பாதுகாப்பாய் வைப்பார்.⁾

6 ⁽அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள.␢ என் எதிரிகளுக்கு எதிரில்␢ நான் தலைநிமிரச் செய்வார்;␢ அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன்␢ பலிகளைச் செலுத்துவேன்;␢ ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.⁾

7 ⁽ஆண்டவரே, நான் மன்றாடும்போது␢ என் குரலைக் கேட்டருளும்;␢ என் மீது இரக்கங்கொண்டு␢ எனக்குப் பதிலளித்தருளும்.⁾

8 ⁽‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது␢ என் உள்ளம்; ஆண்டவரே,␢ உமது முகத்தையே நாடுவேன்.⁾

9 ⁽உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;␢ நீர் சினங்கொண்டு␢ அடியேனை விலக்கிவிடாதிரும்; § நீரே எனக்குத் துணை;␢ என் மீட்பராகிய கடவுளே,␢ என்னைத் தள்ளிவிடாதேயும்;␢ என்னைக் கைவிடாதிரும்.⁾

10 ⁽என் தந்தையும் தாயும்␢ என்னைக் கைவிட்டாலும்␢ ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.⁾

11 ⁽ஆண்டவரே, உமது வழியை␢ எனக்குக் கற்பித்தருளும்;␢ என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச்␢ செம்மையான பாதையில் நடத்தும்.⁾

12 ⁽என் பகைவரின் விருப்பத்திற்கு␢ என்னைக் கையளித்துவிடாதிரும்;␢ ஏனெனில், பொய்ச்சாட்சிகளும்␢ வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும்␢ எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.⁾

13 ⁽வாழ்வோரின் நாட்டினிலே␢ ஆண்டவரின் நலன்களைக்␢ காண்பேன் என்று␢ நான் இன்னும் நம்புகின்றேன்.⁾

14 ⁽நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;␢ மன உறுதிகொள்;␢ உன் உள்ளம் வலிமை பெறட்டும்;␢ ஆண்டவருக்காகக் காத்திரு.⁾

சங்கீதம் 27 ERV IRV TRV