1 ⁽எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,␢ நான் மன்றாடும்போது␢ எனக்குப் பதிலளித்தருளும்;␢ நான் நெருக்கடியில் இருந்தபோது,␢ நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;␢ இப்போதும் எனக்கு இரங்கி,␢ என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;⁾

2 ⁽மானிடரே! எவ்வளவு காலம்␢ எனக்குரிய மாட்சிக்கு␢ இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?␢ எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்␢ பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)⁾

3 ⁽ஆண்டவர் என்னைத் தம்␢ அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;␢ நான் மன்றாடும் போது␢ அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;␢ – இதை அறிந்துகொள்ளுங்கள்.⁾

4 ⁽சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;␢ படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி␢ அமைதியாயிருங்கள். (சேலா)⁾

5 ⁽முறையான பலிகளைச் செலுத்துங்கள்;␢ ஆண்டவரை நம்புங்கள்.⁾

6 ⁽‛நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’␢ எனக் கேட்பவர் பலர்.␢ ஆண்டவரே, எங்கள்மீது உமது␢ முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.⁾

7 ⁽தானியமும் திராட்சையும்␢ நன்கு விளையும் காலத்தில் அடையும்␢ மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை␢ நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.⁾

8 ⁽இனி, நான் மன அமைதியுடன்␢ படுத்துறங்குவேன்; ஏனெனில்,␢ ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்␢ நீரே என்னைப் பாதுகாப்புடன் § வாழச் செய்கின்றீர்.⁾