1 ⁽எளியோரின் நலனில் அக்கறை␢ கொள்பவர் பேறுபெற்றவர்;␢ துன்ப நாளில் ஆண்டவர்␢ அவரை விடுவிப்பார்.⁾

2 ⁽ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்;␢ நெடுங்காலம் வாழவைப்பார்;␢ நாட்டில் பேறுபெற்றவராய்␢ விளங்கச் செய்வார்;␢ எதிரிகளின் விருப்பத்திற்கு␢ அவரைக் கையளிக்க மாட்டார்.⁾

3 ⁽படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில்␢ ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்;␢ நோய் நீங்கிப் படுக்கையினின்று␢ அவர் எழும்பும்படிச் செய்வார்.⁾

4 ⁽‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்;␢ என்னைக் குணப்படுத்தும்;␢ உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’␢ என்று மன்றாடினேன்.⁾

5 ⁽என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி,␢ ‛அவன் எப்போது சாவான்?␢ அவன் பெயர் எப்போது ஒழியும்’␢ என்கின்றனர்.⁾

6 ⁽ஒருவன் என்னைப் பார்க்கவந்தால்,␢ நயவஞ்சகமாகப் பேசுகின்றான்;␢ என்னைப்பற்றிய தவறான செய்திகளைச்␢ சேகரித்துக்கொண்டு,␢ வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான்.⁾

7 ⁽என்னை வெறுப்போர் அனைவரும்␢ ஒன்றுகூடி எனக்கு எதிராய்க்␢ காதோடு காதாய்ப் பேசுகின்றனர்.␢ எனக்குத் தீங்கிழைக்கத்␢ திட்டமிடுகின்றனர்.⁾

8 ⁽‛தீயது ஒன்று அவனை␢ உறுதியாய்ப் பற்றிக்கொண்டது;␢ படுக்கையில் கிடக்கின்ற அவன்␢ இனி எழவே மாட்டான்’ என்று␢ சொல்கின்றனர்.⁾

9 ⁽என் உற்ற நண்பன்,␢ நான் பெரிதும் நம்பினவன்,␢ என் உணவை உண்டவன்,␢ எனக்கு இரண்டகமாகத்␢ தம் குதிகாலைத் தூக்குகின்றான்.⁾

10 ⁽ஆண்டவரே! என் மீது இரங்கி,␢ நான் அவர்களுக்குப்␢ பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும்.⁾

11 ⁽என் எதிரி என்னை வென்று␢ ஆர்ப்பரிக்கப் போவதில்லை;␢ இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர்␢ என்பதை அறிந்து கொள்கின்றேன்.⁾

12 ⁽நானோ நேர்மையில்␢ உறுதியாய் இருக்கின்றேன்;␢ நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்;␢ உமது முன்னிலையில் என்னை␢ என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.⁾

13 ⁽இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்␢ புகழப் பெறுவராக!␢ ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவராக!␢ ஆமென்! ஆமென்!⁾

சங்கீதம் 41 ERV IRV TRV