1 ⁽கடவுளே, என் நேர்மையை § நிலைநாட்டும்;␢ இறைப்பற்றில்லா இனத்தோடு␢ என் வழக்குக்காக வாதிடும்;␢ வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த␢ மனிதர் கையினின்று␢ என்னை விடுவித்தருளும்.⁾

2 ⁽ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்;␢ ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்?␢ எதிரியால் ஒடுக்கப்பட்டு,␢ நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?⁾

3 ⁽உம் ஒளியையும் உண்மையையும்␢ அனுப்பியருளும்;␢ அவை என்னை வழி நடத்தி,␢ உமது திருமலைக்கும்␢ உமது உறைவிடத்திற்கும்␢ கொண்டுபோய்ச் சேர்க்கும்.⁾

4 ⁽அப்பொழுது, நான்␢ கடவுளின் பீடம் செல்வேன்;␢ என் மன மகிழ்ச்சியாகிய␢ இறைவனிடம் செல்வேன்;␢ கடவுளே! என் கடவுளே!␢ யாழிசைத்து ஆர்ப்பரித்து␢ உம்மைப் புகழ்ந்திடுவேன்.⁾

5 ⁽என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?␢ நீ கலக்கமுறுவது ஏன்?␢ கடவுளையே நம்பியிரு;␢ என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு␢ இன்னும் நான் அவருக்கு␢ நன்றி செலுத்துவேன்.⁾

சங்கீதம் 43 ERV IRV TRV