1 ⁽ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் பெருமூச்சைக் கவனித்தருளும்.⁾

2 ⁽என் அரசரே, என் கடவுளே,␢ என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;␢ ஏனெனில். நான் உம்மை நோக்கியே␢ மன்றாடுகின்றேன்.⁾

3 ⁽ஆண்டவரே, விடியற்காலையில்␢ என் குரலைக் கேட்டருளும்;␢ வைகறையில் உமக்காக வழிமேல்␢ விழிவைத்துக் காத்திருப்பேன்.⁾

4 ⁽ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து␢ மகிழும் இறைவன் இல்லை;␢ உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.⁾

5 ⁽ஆணவமிக்கோர்␢ உமது கண்முன் நிற்க மாட்டார்;␢ தீங்கிழைக்கும் அனைவரையும்␢ நீர் வெறுக்கின்றீர்.⁾

6 ⁽பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;␢ கொலை வெறியரையும் வஞ்சகரையும்␢ அருவருக்கின்றீர்.⁾

7 ⁽நானோ உம் பேரருளால்␢ உமது இல்லம் சென்றிடுவேன்;␢ உம் திருத்தூயகத்தை நோக்கி␢ இறையச்சத்துடன்␢ உம்மைப் பணிந்திடுவேன்;⁾

8 ⁽ஆண்டவரே, எனக்குப் பகைவர்␢ பலர் இருப்பதால்,␢ உமது நீதியின் பாதையில்␢ என்னை நடத்தும்;␢ உமது செம்மையான வழியை␢ எனக்குக் காட்டியருளும்.⁾

9 ⁽ஏனெனில், அவர்கள் வாயில்␢ உண்மை இல்லை; அவர்கள் உள்ளம் § அழிவை உண்டாக்கும்;␢ அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;␢ அவர்கள் நா வஞ்சகம் பேசும்.⁾

10 ⁽கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய␢ தண்டனையை அவர்களுக்கு அளியும்;␢ அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே␢ வீழ்ச்சியுறட்டும்;␢ அவர்களுடைய ஏராளமான␢ தீச்செயல்களை முன்னிட்டு,␢ அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.␢ ஏனெனில், அவர்கள்␢ உம்மை எதிர்த்துள்ளார்கள்.⁾

11 ⁽ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர்␢ அனைவரும் மகிழ்வர்;␢ அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;␢ நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;␢ உமது பெயரில் பற்றுடையோர்␢ உம்மில் அக்களிப்பர்.⁾

12 ⁽ஏனெனில், ஆண்டவரே,␢ நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;␢ கருணை என்னும் கேடயத்தால்␢ அவரை மறைத்துக் காப்பீர்.⁾

சங்கீதம் 5 ERV IRV TRV