1 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். என் ஜெபத்தைக் கேளும்.

2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.

3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.

4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.

5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர். உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.

6 அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும். அவர் என்றென்றும் வாழட்டும்!

7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்! உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.

8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன். நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.

சங்கீதம் 61 ERV IRV TRV