1 ⁽கடவுளே! என் விண்ணப்பக்␢ குரலைக் கேட்டருளும்;␢ என் எதிரியினால் விளையும்␢ அச்சத்தினின்று␢ என் உயிரைக் காத்தருளும்.⁾

2 ⁽பொல்லாரின் சூழ்ச்சியினின்றும்␢ தீயோரின் திட்டத்தினின்றும்␢ என்னை மறைத்துக் காத்திடும்.⁾

3 ⁽அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக்␢ கூர்மையாக்குகின்றார்கள்;␢ நஞ்சுள்ள சொற்களை␢ அம்புபோல் எய்கின்றார்கள்;⁾

4 ⁽மறைவிடங்களில் இருந்துகொண்டு␢ மாசற்றோரைக்␢ காயப்படுத்துகின்றார்கள்;␢ அச்சமின்றி அவர்களைத்␢ திடீரெனத் தாக்குகின்றார்கள்;⁾

5 ⁽தீங்கு இழைப்பதில்␢ உறுதியாய் இருக்கின்றார்கள்;␢ ‛நம்மை யார் பார்க்க முடியும்’␢ என்று சொல்லி மறைவாகக்␢ கண்ணிகளை வைப்பதற்குச்␢ சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;⁾

6 ⁽நேர்மையற்ற செயல்களைச் செய்யத்␢ திட்டமிடுகின்றார்கள்;␢ ‛எங்கள் திறமையில்␢ தந்திரமான சூழ்ச்சியை␢ உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்;␢ மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும்␢ மிக ஆழமானவை.⁾

7 ⁽ஆனால், கடவுள் அவர்கள்மேல்␢ அம்புகளை எய்ய,␢ அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.⁾

8 ⁽தங்களது நாவினாலேயே␢ அவர்கள் அழிவார்கள்;␢ அவர்களைப் பார்ப்போர் அனைவரும்␢ எள்ளி நகைப்பார்கள்.⁾

9 ⁽அப்பொழுது எல்லா மனிதரும்␢ அச்சம் கொள்வர்;␢ கடவுளின் செயல்களை␢ எடுத்துரைப்பர்;␢ அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.⁾

10 ⁽நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவர்;␢ நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.⁾

சங்கீதம் 64 ERV IRV TRV