1 ⁽கடவுளே! என்னை விடுவித்தருளும்;␢ ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய␢ விரைந்து வாரும்!⁾

2 ⁽என் உயிரைப்␢ பறிக்கத் தேடுவோர் அனைவரும்␢ வெட்கமும் குழப்பமும் அடைவராக!␢ எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர்␢ வெட்கத்தால் தலைகுனிந்து␢ பின்னிட்டுத் திரும்புவராக!⁾

3 ⁽என்னைப் பார்த்து, ‛ஆ! ஆ!’ என்று␢ ஏளனம் செய்வோர்␢ பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக!⁾

4 ⁽உம்மை நாடித் தேடும் அனைவரும்␢ உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக!␢ நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர்␢ ‛கடவுள் மாட்சி மிக்கவர்’ என்று␢ எப்போதும் சொல்வர்.⁾

5 ⁽நான் சிறுமையுற்றவன், ஏழை;␢ கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்;␢ நீரே எனக்குத் துணை;␢ என்னை விடுவிப்பவர்;␢ என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.⁾

சங்கீதம் 70 ERV IRV TRV