1 ⁽உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக்␢ கடவுள் எவ்வளவு நல்லவர்!␢ தூய உள்ளத்தினர்க்கு␢ ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!⁾

2 ⁽என் கால்கள்␢ சற்றே நிலைதடுமாறலாயின;␢ நான் அடிசறுக்கி விழப்போனேன்.⁾

3 ⁽ஆணவம் கொண்டோர்மேல்␢ நான் பொறாமை கொண்டேன்;␢ பொல்லாரின் வளமிகு வாழ்வை␢ நான் கண்டேன்.⁾

4 ⁽அவர்களுக்குச்␢ சாவின் வேதனை என்பதே இல்லை;␢ அவர்களது உடல்,␢ நலமும் உரமும் கொண்டது.⁾

5 ⁽மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம்␢ அவர்களுக்கு இல்லை.␢ மற்ற மனிதர்களைப் போல்␢ அவர்கள் துன்புறுவதில்லை.⁾

6 ⁽எனவே, மணிமாலைபோல்␢ செருக்கு அவர்களை அணி செய்கிறது;␢ வன்செயல் அவர்களை␢ ஆடைபோல மூடிக்கொள்கிறது.⁾

7 ⁽அவர்களின் கண்கள்␢ கொழுப்பு மிகுதியால்␢ புடைத்திருக்கின்றன;␢ அவர்களது மனத்தின் கற்பனைகள்␢ எல்லை கடந்து செல்கின்றன.⁾

8 ⁽பிறரை எள்ளி நகையாடி␢ வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்;␢ இறுமாப்புக்கொண்டு␢ கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.⁾

9 ⁽விண்ணுலகை எதிர்த்து␢ அவர்கள் வாய் பேசுகின்றது;␢ மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல்␢ விரிந்து பரவுகின்றது.⁾

10 ⁽ஆதலால், கடவுளின் மக்களும்␢ அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்;␢ இவ்வாறு, கடல் முழுவதையும்␢ உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.⁾

11 ⁽‘இறைவனுக்கு எப்படித் தெரியும்?␢ உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’␢ என்கின்றார்கள்.⁾

12 ⁽ஆம்; பொல்லார்␢ இப்படித்தான் இருக்கின்றனர்;␢ என்றும் வளமுடன் வாழ்ந்து␢ செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.⁾

13 ⁽அப்படியானால், நான் என் உள்ளத்தை␢ மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?␢ குற்றமற்ற நான் என் கைகளைக்␢ கழுவிக்கொண்டதும் வீண்தானா?⁾

14 ⁽நாள்தோறும் நான்␢ வதைக்கப்படுகின்றேன்;␢ காலைதோறும்␢ கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.⁾

15 ⁽“நானும் அவர்களைப்போல் பேசலாமே”␢ என்று நான் நினைத்திருந்தால்,␢ உம் மக்களின் தலைமுறைக்கு␢ நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.⁾

16 ⁽ஆகவே, இதன் உண்மை என்னவென்று␢ கண்டறிய முயன்றேன்;␢ ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.⁾

17 ⁽நான் இறைவனின் தூயகத்திற்குச்␢ சென்றபின்புதான்␢ அவர்களுக்கு நேரிடப்போவது என்ன␢ என்பதை உணர்ந்துகொண்டேன்.⁾

18 ⁽உண்மையில் அவர்களை நீர்␢ சறுக்கலான இடங்களில் வைப்பீர்;␢ அவர்களை விழத்தாட்டி␢ அழிவுக்கு உள்ளாக்குவீர்.⁾

19 ⁽அவர்கள் எவ்வளவு விரைவில்␢ ஒழிந்து போகிறார்கள்!␢ அவர்கள் திகில் பிடித்தவர்களாய்␢ அடியோடு அழிந்து போகிறார்கள்!⁾

20 ⁽விழித்தெழுவோரின் கனவுபோல்␢ அவர்கள் ஒழிந்து போவார்கள்;␢ என் தலைவராகிய ஆண்டவரே,␢ நீர் கிளர்ந்தெழும்போது␢ அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.⁾

21 ⁽என் உள்ளம் கசந்தது;␢ என் உணர்ச்சிகள் என்னை␢ ஊடுருவிக் குத்தின.⁾

22 ⁽அப்பொழுது நான்␢ அறிவிழந்த மதிகேடனானேன்;␢ உமது முன்னிலையில்␢ ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.⁾

23 ⁽ஆனாலும், நான் எப்போதும்␢ உமது முன்னிலையிலேதான்␢ இருக்கின்றேன்; என் வலக்கையை␢ ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.⁾

24 ⁽உமது திருவுளப்படியே␢ என்னை நடத்துகின்றீர்;␢ முடிவில் மாட்சியோடு␢ என்னை எடுத்துக் கொள்வீர்.⁾

25 ⁽விண்ணுலகில் உம்மையன்றி␢ எனக்கிருப்பவர் யார்?␢ மண்ணுலகில் வேறு விருப்பம்␢ உம்மையன்றி எனக்கேதுமில்லை.⁾

26 ⁽எனது உடலும் உள்ளமும்␢ நைந்து போயின;␢ கடவுளே என் உள்ளத்திற்கு அரணும்␢ என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.⁾

27 ⁽உண்மையிலேயே, உமக்குத்␢ தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;␢ உம்மைக் கைவிடும்␢ அனைவரையும் அழித்துவிடும்.⁾

28 ⁽நானோ கடவுளின் அண்மையே␢ எனக்கு நலமெனக் கொள்வேன்;␢ என் தலைவராகிய ஆண்டவரை␢ என் அடைக்கலமாய்க்கொண்டு␢ அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.⁾

சங்கீதம் 73 ERV IRV TRV