1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.

2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து,

3 “எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார்.

4 முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைபற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.⒫

5 ⁽யூதா குலத்தில் முத்திரையிடப்␢ பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம்,␢ ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,⁾

6 ⁽ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,⁾

7 ⁽சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,⁾

8 ⁽செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.⁾⒫

9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

10 அவர்கள், ⁽“அரியணையில் வீற்றிருக்கும்␢ எங்கள் கடவுளிடமிருந்தும்␢ ஆட்டுக் குட்டியிடமிருந்துமே␢ மீட்பு வருகிறது”⁾ என்று உரத்த குரலில் பாடினார்கள்.⒫

11 அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.⒫

12 ⁽“ஆமென், புகழ்ச்சியும் பெருமையும்␢ ஞானமும் நன்றியும் மாண்பும்␢ வல்லமையும் வலிமையும்␢ எங்கள் கடவுளுக்கே␢ என்றென்றும் உரியன; ஆமென்”⁾ என்று பாடினார்கள்.⒫

13 மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.

14 நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.⒫

15 ⁽இதனால்தான் கடவுளது␢ அரியணைமுன் நின்றுகொண்டு␢ அவரது கோவிலில் அல்லும் பகலும்␢ அவரை வழிபட்டுவருகிறார்கள்;␢ அரியணையில் வீற்றிருப்பவர்␢ அவர்களிடையே குடிகொண்டு␢ அவர்களைப் பாதுகாப்பார்.⁾

16 ⁽இனி அவர்களுக்குப்␢ பசியோ தாகமோ இரா;␢ கதிரவனோ எவ்வகை வெப்பமோ␢ அவர்களைத் தாக்கா.⁾

17 ⁽ஏனெனில் அரியணை நடுவில்␢ இருக்கும் ஆட்டுக்குட்டி␢ அவர்களை மேய்க்கும்;␢ வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு␢ வழிநடத்திச் செல்லும்.␢ கடவுள் அவர்களின் கண்ணீர்␢ அனைத்தையும் துடைத்துவிடுவார்.”⁾