1 ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியின் மைந்தர் ஆவார்.

2 “மண்ணுலகில் எதுவும் இராதவாறு

3 ⁽அனைத்தையும் அழித்துவிடுவேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.␢ “மனிதரையும் விலங்குகளையும்␢ அழிப்பேன்;␢ வானத்துப் பறவைகளையும்␢ கடல் மீன்களையும் ஒழிப்பேன்;␢ கொடியவர்களை␢ இடறிவிழச் செய்வேன்;␢ மனிதஇனம்␢ மண்ணுலகில் இல்லாதவாறு␢ அற்றுப் போகச் செய்வேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

4 ⁽யூதாவுக்கும் எருசலேமில் வாழும்␢ அனைவர்க்கும் எதிராக␢ நான் கையை ஓங்குவேன்.␢ பாகால் வழிபாட்டில்␢ எஞ்சியிருப்பதையும்␢ அந்தச் சிலை வழிபாட்டு␢ அர்ச்சகர்களின் பெயரையும்␢ அழித்து விடுவேன்.⁾

5 ⁽வீட்டின் மேல்தளத்திலிருந்து␢ வான் படைகளை வணங்குவோரையும்,␢ ஆண்டவரை வணங்கி␢ அவர் பெயராலும்␢ மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும்␢ ஆணையிடுவோரையும்␢ ஒழித்து விடுவேன்.⁾

6 ⁽ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும்␢ ஆண்டவரைத் தேடாது,␢ அவரை அறிய முயலாது இருப்போரையும்␢ அழித்துவிடுவேன்.⁾

7 ⁽தலைவராகிய ஆண்டவர் திருமுன்␢ மௌனமாயிருங்கள்;␢ ஏனெனில் ஆண்டவரின் நாள்␢ அண்மையில் உள்ளது;␢ பலி ஒன்றை␢ ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்;␢ தாம் அழைத்தவர்களை␢ அவர் புனிதப்படுத்தியுள்ளார்⁾

8 ⁽ஆண்டவரது பலியின் நாளில்␢ தலைவர்களையும்␢ அரசனுடைய புதல்வர்களையும்␢ வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள␢ அனைவரையும் தண்டிப்பேன்.⁾

9 ⁽வாயிற்படியை மிதிக்காமல்␢ தாண்டி வந்து,␢ தங்கள் தலைவனின் வீட்டை␢ வன்செயலாலும் வஞ்சனையாலும்␢ நிரப்புகிறவர்களை␢ அந்நாளில் தண்டிப்பேன்.⁾

10 ⁽ஆண்டவர் கூறுகின்றார்:␢ “அந்நாளில் எருசலேமின்␢ மீன் வாயிலிருந்து கூக்குரலும்,␢ புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும்,␢ குன்றுகளிலிருந்து␢ இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.⁾

11 ⁽நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே!␢ கதறி அழுங்கள்;␢ ஏனெனில், வணிகர் அனைவர்க்கும்␢ அழிவு வருகின்றது;␢ பணம் படைத்தவர் அனைவரும்␢ வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்;⁾

12 ⁽அக்காலத்தில்,␢ நான் கையில் விளக்கேந்திக் கொண்டு␢ எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்;␢ ‘ஆண்டவர் நன்மையும் செய்யார்;␢ தீமையும் செய்யார்’ என்று␢ தங்கள் உள்ளங்களில்␢ சொல்லிக் கொண்டு␢ பஞ்சணையில் சாய்ந்து␢ கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.⁾

13 ⁽அவர்களுடைய உடைமைகள்␢ கொள்ளையடிக்கப்படும்;␢ வீடுகள் பாழாக்கப்படும்;␢ அவர்கள் வீடுகள்␢ கட்டிக்கொள்வார்கள்;␢ ஆனால் அவற்றில்␢ குடியிருக்கப்போவதில்லை;␢ திராட்சைத் தோட்டங்களைப்␢ பயிர் செய்தாலும்,␢ அவற்றின் இரசத்தைக்␢ குடிக்கப் போவதில்லை.”⁾

14 ⁽ஆண்டவரின் மாபெரும் நாள்␢ அண்மையில் உள்ளது;␢ அது விரைந்து␢ நெருங்கிக் கொண்டிருக்கிறது;␢ ஆண்டவரது நாளின் பேரொலி␢ கசப்பை உண்டாக்கும்;␢ மாவீரனையும் கலங்கி␢ அலறும்படி செய்யும்.⁾

15 ⁽அந்த நாள் கடும் சினத்தின் நாள்;␢ துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;␢ பேரழிவும் பேரிழப்பும்␢ கொண்டு வரும் நாள்;␢ இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;⁾

16 ⁽அரண்சூழ் நகர்களுக்கும்␢ உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக␢ எக்காளமும் போர் முழக்கமும்␢ கேட்கும் நாள்.⁾

17 ⁽மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்;␢ பார்வையற்றோர்போல்␢ அவர்கள் தடுமாறுவர்;␢ ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப்␢ பாவம் செய்தனர்;␢ அவர்களது இரத்தம்␢ புழுதி போல் கொட்டப்படும்;␢ சதைப்பிண்டம்␢ சாணம்போல் எறியப்படும்.⁾

18 ⁽ஆண்டவரது சினத்தின் நாளில்,␢ அவர்களது வெள்ளியும் பொன்னும்␢ அவர்களைக் காப்பாற்றா.␢ உலகம் முழுவதும்␢ அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும்.␢ உலகில் வாழும் அனைவரையும்␢ அவர் நொடிப்பொழுதில்␢ முற்றிலும் அழித்துவிடுவார்.⁾

செப்பனியா 1 ERV IRV TRV