1 ⁽கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும்␢ மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு␢ ஐயோ கேடு!⁾

2 ⁽எந்தச் சொல்லுக்கும் அவள்␢ செவி சாய்ப்பதில்லை;␢ கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை;␢ ஆண்டவர்மேல் அவள்␢ நம்பிக்கை வைப்பதில்லை;␢ தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.⁾

3 ⁽அந்நகரின் தலைவர்கள்␢ கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்;␢ அதன் நீதிபதிகள்,␢ மாலையில் கிடைப்பதை␢ காலைவரை வைத்திராத ஓநாய்கள்.⁾

4 ⁽அதன் இறைவாக்கினர்␢ வீண் பெருமை பேசும்␢ வஞ்சகமிக்க மனிதர்;␢ அதன் குருக்கள்␢ புனிதமானதைக் களங்கப்படுத்தித்␢ திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.⁾

5 ⁽அதனுள் இருக்கும் ஆண்டவரோ␢ நீதியுள்ளவர்;␢ அவர் கொடுமை செய்யாதவர்;␢ காலைதோறும் அவர்␢ தமது தீர்ப்பை வழங்குகின்றார்;␢ வைகறைதோறும் அது␢ தவறாமல் வெளிப்படும்;␢ ஆனால் கொடியவனுக்கு␢ வெட்கமே இல்லை.⁾

6 ⁽வேற்றினத்தாரை நான்␢ வெட்டி வீழ்த்தினேன்;␢ அவர்களுடைய கோட்டைகளைத்␢ தகர்த்தெறிந்தேன்;␢ அவர்களுடைய தெருக்களை␢ வெறுமையாக்கினேன்;␢ அவற்றில் நடந்துசெல்பவர்␢ எவருமில்லை;␢ யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி␢ அவர்களுடைய நகர்கள்␢ பாழடைந்து போயின.⁾

7 ⁽“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்;␢ எனது கண்டிப்புரையை␢ ஏற்றுக் கொள்வாய்;␢ நான் வழங்கிய␢ தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம்␢ நீ மறக்கமாட்டாய்” என்று␢ நான் எண்ணினேன்;␢ அவர்களோ தங்கள் செயல்களைச்␢ சீர்கேடாக்க␢ இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.⁾

8 ⁽ஆதலால் ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகின்றார்:␢ “நான் குற்றம் சாட்டுவதற்கு␢ எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு;␢ வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து,␢ அரசுகளையும் ஒன்று திரட்டி,␢ என் கடும்சினத்தையும்␢ கோபத்தீயின் கொடுமை முழுவதையும்,␢ அவர்கள் மேல் கொட்டிவிடத்␢ திட்டமிட்டுள்ளேன்;␢ ஏனெனில், என் வெஞ்சினத் தீக்கு␢ உலகெல்லாம் இரையாகும்.⁾

9 ⁽அக்காலத்தில் நான்␢ மக்களினங்களுக்குத்␢ தூய நாவினை அருள்வேன்;␢ அப்போது அவர்கள் அனைவரும்␢ ஆண்டவரின் பெயரால்␢ மன்றாடி ஒருமனப்பட்டு␢ அவருக்குப் பணிபுரிவார்கள்.⁾

10 ⁽எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும்␢ அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் —␢ சிதறுண்ட என் மக்கள் —␢ எனக்குக் காணிக்கை␢ கொண்டு வருவார்கள்.⁾

11 ⁽எனக்கு எதிராக எழுந்து␢ நீ செய்த குற்றங்களை முன்னிட்டு␢ அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்;␢ ஏனெனில், அப்பொழுது␢ இறுமாப்புடன் அக்களித்திருப்போரை␢ உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்;␢ இனி ஒருபோதும் எனது திருமலையில்␢ செருக்கு அடையமாட்டாய்.⁾

12 ⁽ஏழை எளியோரை உன் நடுவில்␢ நான் விட்டுவைப்பேன்;␢ அவர்கள் ஆண்டவரின் பெயரில்␢ நம்பிக்கை கொள்வார்கள்.⁾

13 ⁽இஸ்ரயேலில் எஞ்சியோர்␢ கொடுமை செய்யமாட்டார்கள்;␢ வஞ்சகப் பேச்சு␢ அவர்களது வாயில் வராது;␢ அச்சுறுத்துவார் யாருமின்றி,␢ அவர்கள் மந்தைபோல் மேய்ந்து␢ இளைப்பாறுவார்கள்.”⁾

14 ⁽மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;␢ இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;␢ மகளே எருசலேம்!␢ உன் முழு உள்ளத்தோடு␢ அகமகிழ்ந்து அக்களி.⁾

15 ⁽ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்␢ தள்ளிவிட்டார்;␢ உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;␢ இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்␢ உன் நடுவில் இருக்கின்றார்;␢ நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.⁾

16 ⁽அந்நாளில் எருசலேமை நோக்கி␢ இவ்வாறு கூறப்படும்:␢ “சீயோனே, அஞ்சவேண்டாம்;␢ உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.⁾

17 ⁽உன் கடவுளாகிய ஆண்டவர்␢ உன் நடுவில் இருக்கின்றார்;␢ அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;␢ உன்பொருட்டு அவர் மகிழ்ந்து␢ களிகூருவார்;␢ தம் அன்பினால் உனக்குப்␢ புத்துயிர் அளிப்பார்;␢ உன்னைக் குறித்து␢ மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.⁾

18 ⁽அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.␢ உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;␢ ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.⁾

19 ⁽இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை␢ அந்நாளில் நான் தண்டிப்பேன்;␢ கால் ஊனமுற்றவர்களைக்␢ காப்பாற்றுவேன்;␢ ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்;␢ அவமானமுற்ற அவர்களை␢ உலகெங்கும் பெயரும் புகழும்␢ பெறச்செய்வேன்.⁾

20 ⁽அக்காலத்தில் உங்களை␢ ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து␢ உங்கள் தாய்நாட்டுக்கு␢ அழைத்து வருவேன்;␢ ஆம், உங்கள் கண்முன்பாகவே␢ உங்களை முன்னைய␢ நன்னிலைக்கு உயர்த்தி,␢ உலகின் எல்லா மக்களிடையேயும்␢ நீங்கள் பெயரும் புகழும்␢ பெறுமாறு செய்வேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

செப்பனியா 3 ERV IRV TRV