1 ⁽‟என் இளமை முதற்கொண்டே␢ என்னைப் பெரிதும்␢ துன்புறுத்தினார்கள்” –␢ இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!⁾

2 ⁽‟என் இளமை முதற்கொண்டே␢ என்னைப் பெரிதும்␢ துன்புறுத்தினார்கள்;␢ எனினும், அவர்கள்␢ என்மீது வெற்றி பெறவில்லை.⁾

3 ⁽உழவர் என் முதுகின்மீது உழுது␢ நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.”⁾

4 ⁽ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே,␢ பொல்லார் கட்டிய கயிறுகளை␢ அவர் அறுத்தெறிந்தார்.⁾

5 ⁽சீயோனைப் பகைக்கும் அனைவரும்␢ அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!⁾

6 ⁽கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு␢ அவர்கள் ஒப்பாவார்கள்;␢ வளருமுன் அது உலர்ந்துபோகும்.⁾

7 ⁽அதை அறுப்போரின் கைக்கு,␢ ஒரு பிடி கூடக் கிடைக்காது;␢ அரிகளைச் சேர்த்தால்␢ ஒரு சுமைகூடத் தேறாது.⁾

8 ⁽வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து,␢ ‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி␢ வழங்குவாராக!’ என்றோ␢ ‛ஆண்டவரின் பெயரால்␢ ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.⁾

சங்கீதம் 129 ERV IRV TRV