1 ⁽கடவுளே! என் மன்றாட்டுக்குச்␢ செவி சாய்த்தருளும்;␢ நான் முறையிடும் வேளையில்␢ உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.⁾

2 ⁽என் விண்ணப்பத்தைக் கேட்டு␢ மறுமொழி அருளும்;␢ என் கவலைகள் என் மன அமைதியைக்␢ குலைத்துவிட்டன.⁾

3 ⁽என் எதிரியின் கூச்சலாலும்,␢ பொல்லாரின் ஒடுக்குதலாலும்␢ நடுங்குகின்றேன்;␢ ஏனெனில், அவர்கள் எனக்கு␢ இடையூறு பல செய்கின்றனர்;␢ சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.⁾

4 ⁽கடுந்துயரம்␢ என் உள்ளத்தைப் பிளக்கின்றது;␢ சாவின் திகில் என்னைக்␢ கவ்விக்கொண்டது.⁾

5 ⁽அச்சமும் நடுக்கமும்␢ என்னை ஆட்கொண்டன;␢ திகில் என்னைக் கவ்விக்கொண்டது.⁾

6 ⁽நான் சொல்கின்றேன்;␢ ‛புறாவுக்கு உள்ளது போன்ற␢ சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?␢ நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!⁾

7 ⁽இதோ! நெடுந்தொலை சென்று,␢ பாலை நிலத்தில்␢ தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)⁾

8 ⁽பெருங்காற்றினின்றும்␢ புயலினின்றும் தப்பிக்கப்␢ புகலிடம் தேட விரைந்திருப்பேனே!⁾

9 ⁽என் தலைவரே! அவர்களின்␢ திட்டங்களைக் குலைத்துவிடும்;␢ அவர்களது பேச்சில்␢ குழப்பத்தை உண்டாக்கும்;␢ ஏனெனில், நகரில் வன்முறையையும்␢ கலகத்தையும் காண்கின்றேன்’.⁾

10 ⁽இரவும் பகலும் அவர்கள்␢ அதன் மதில்கள் மேல் ஏறி␢ அதைச் சுற்றி வருகின்றனர்;␢ கேடும் கொடுமையும்␢ அதில் நிறைந்திருக்கின்றன.⁾

11 ⁽அதன் நடுவே இருப்பது அழிவு;␢ அதன் தெருக்களில் பிரியாதிருப்பன␢ கொடுமையும் வஞ்சகமுமே!⁾

12 ⁽என்னை இழித்துரைக்கின்றவன்␢ என் எதிரியல்ல; அப்படியிருந்தால்,␢ பொறுத்துக்கொள்வேன்;␢ எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன்␢ எனக்குப் பகைவன் அல்ல;␢ அப்படியிருந்தால், அவனிடமிருந்து␢ என்னை மறைத்துக்கொள்வேன்.⁾

13 ⁽ஆனால், அவன் வேறு யாரும் அல்ல;␢ என் தோழனாகிய நீயே;␢ என் நண்பனும் என்னோடு␢ நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.⁾

14 ⁽நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்;␢ கடவுளின் இல்லத்தில்␢ பெருங்கூட்டத்தினிடையே␢ நடமாடினோம்;⁾

15 ⁽என் எதிரிகளுக்குத்␢ திடீரெனச் சாவு வரட்டும்;␢ அவர்கள் உயிரோடு␢ பாதாளத்தில் இறங்கட்டும்;␢ ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில்␢ அவர்கள் நடுவிலேயே␢ தீமை புகுந்து விட்டது.⁾

16 ⁽நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்;␢ ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.⁾

17 ⁽காலை, நண்பகல், மாலை வேளைகளில்␢ நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்;␢ அவர் என் குரலைக் கேட்டருள்வார்.⁾

18 ⁽அணிவகுத்து என்னை␢ எதிர்த்து வந்தோர் மிகப் பலர்;␢ என்னோடு போரிட்டோர் கையினின்று␢ அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.⁾

19 ⁽தொன்றுதொட்டு␢ அரியணையில் வீற்றிருக்கும்␢ கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்;␢ அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா)␢ ஏனெனில், அவர்கள் தம்␢ நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை;␢ கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.⁾

20 ⁽தன்னோடு நட்புறவில்␢ இருந்தவர்களை எதிர்த்து␢ அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்;␢ தன் உடன்படிக்கையையும் மீறினான்.⁾

21 ⁽அவன் பேச்சு␢ வெண்ணெயிலும் மிருதுவானது;␢ அவன் உள்ளத்திலோ போர்வெறி;␢ அவன் சொற்கள்␢ எண்ணெயிலும் மென்மையானவை;␢ அவையோ உருவிய வாள்கள்.⁾

22 ⁽ஆண்டவர் மேல்␢ உன் கவலையைப் போட்டுவிடு;␢ அவர் உனக்கு ஆதரவளிப்பார்;␢ அவர் நேர்மையாளரை␢ ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.⁾

23 ⁽கடவுளே, நீர் அவர்களைப்␢ படுகுழியில் விழச்செய்யும்;␢ கொலைவெறியரும் வஞ்சகரும்␢ தம் ஆயுள் காலத்தில்␢ பாதிகூடத் தாண்டமாட்டார்;␢ ஆனால், நான்␢ உம்மையே நம்பியிருக்கின்றேன்.⁾

சங்கீதம் 55 ERV IRV TRV