1 கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.

2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.

3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.

5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.

6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.

7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.

8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.

9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். கர்த்தரைத் துதியுங்கள்!

சங்கீதம் 113 ERV IRV TRV