1 அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; கர்த்தருடைய பெயரைத் துதியுங்கள்.

2 இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.

3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை கர்த்தருடைய பெயர் துதிக்கப்படட்டும்.

4 கர்த்தர் எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமமானமானவர் யார்?

6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

8 அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.

9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.

சங்கீதம் 113 ERV IRV TRV