1 ⁽அல்லேலூயா!␢ ஆண்டவரின் ஊழியர்களே,␢ அவரைப் புகழுங்கள்.␢ அவரது பெயரைப் போற்றுங்கள்.⁾

2 ⁽ஆண்டவரது பெயர்␢ வாழ்த்தப்பெறுவதாக!␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்தப்பெறுவதாக!⁾

3 ⁽கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை␢ ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!⁾

4 ⁽மக்களினங்கள் அனைத்திற்கும்␢ ஆண்டவர் மேலானவர்;␢ வானங்களையும்விட உயர்ந்து␢ அவரது மாட்சி.⁾

5 ⁽நம் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ நிகர் யார்?␢ அவர்போல வானளாவிய உயரத்தில்␢ வீற்றிருப்பவர் யார்?⁾

6 ⁽அவர் வானத்தையும் வையகத்தையும்␢ குனிந்து பார்க்கின்றார்;⁾

7 ⁽ஏழைகளைத் தூசியிலிருந்து␢ அவர் தூக்கி நிறுத்துகின்றார்;␢ வறியரைக் குப்பை மேட்டிலிருந்து␢ கைதூக்கி விடுகின்றார்;⁾

8 ⁽உயர்குடி மக்களிடையே – § தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே –␢ அவர்களை அமரச் செய்கின்றார்.⁾

9 ⁽மலடியை அவள் இல்லத்தில்␢ வாழ வைக்கின்றார்;␢ தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு␢ அவளுக்கு அருள்கின்றார்.␢ அல்லேலூயா!⁾

சங்கீதம் 113 ERV IRV TRV