எஸ்தர் 9

fullscreen1 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

fullscreen2 யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

fullscreen3 நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

fullscreen4 மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

fullscreen5 அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.

fullscreen6 யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.

fullscreen7 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,

fullscreen8 பொராதா, அதலியா, அரிதாத்தா,

fullscreen9 பர்மஷடா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.

fullscreen10 ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

fullscreen11 அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.

fullscreen12 அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.

fullscreen13 அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.

fullscreen14 அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான், அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.

fullscreen15 சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

fullscreen16 ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

fullscreen17 ஆதார் மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

fullscreen18 சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.

fullscreen19 ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

fullscreen20 மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

fullscreen21 வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

fullscreen22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.

fullscreen23 அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

fullscreen24 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

fullscreen25 ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

fullscreen26 ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

fullscreen27 யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,

fullscreen28 இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.

fullscreen29 பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

fullscreen30 யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,

fullscreen31 அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

fullscreen32 இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.

Cross Reference

Job 34:5
ଆୟୁବ କ ହେ, 'ମୁଁ ଆୟୁବ, ମୁଁ ନିରପରାଧୀ ଅଟେ। ଏବଂ ପରମେଶ୍ବର ମାେ' ପ୍ରତି ଉଚିତ୍ ନ୍ଯାଯ କରି ନାହାଁନ୍ତି।

2 Kings 4:27
ଅନନ୍ତର ସେ ପରମେଶ୍ବରଙ୍କ ଲୋକ ନିକଟକୁ ଆସି ତାଙ୍କର ଚରଣ ତଳେ ପଡିଲା। ଏଥି ରେ ଗି ହଜେୀ ତାକୁ ଟାଣିବାରୁ ପରମେଶ୍ବରଙ୍କ ଲୋକ କହିଲେ, ତାହାକୁ ଛାଡିଦିଅ। କାରଣ ତା'ର ପ୍ରାଣ ଶାେକାକୁଳ। ମାତ୍ର ସଦାପ୍ରଭୁ ମାେତେ ଜାଣାଇଲେ ନାହିଁ କ'ଣ ବାଳକ ପ୍ରତି ଘଟିଅଛି। ସେ ଏହା ମାଠାରୁେ ଗୋପନ ରଖିଲେ।

Numbers 14:21
କିନ୍ତୁ ମୁଁ ପ୍ରତିଜ୍ଞା କରୁଅଛି ଯେ, ଏହି ସମସ୍ତ ପୃଥିବୀ ସଦାପ୍ରଭୁଙ୍କ ମହିମା ରେ ପରିପୂର୍ଣ ହବେ।

Job 10:3
ଯେତବେେଳେ ପରମେଶ୍ବର, ମାେତେ ଆଘାତ କରନ୍ତି, ତାହା କ'ଣ ତୁମ୍ଭକୁ ଖୁସି କରେ ? ଏପରି ଦଖାଯାେଉଛି ଯେପରି ତୁମ୍ଭେ ଯାହାକୁ ଗଢ଼ିଛ, ତାହାର କୌଣସି ଯତ୍ନ ନେଉ ନାହଁ। କିନ୍ତୁ ତୁମ୍ଭେ ଦୁଷ୍ଟ ଲୋକଙ୍କର ଯୋଜନା ରେ ଖୁସି।

Isaiah 40:27
ହେ ଯାକୁବ, ତୁମ୍ଭେ କାହିଁକି ଅଭିଯୋଗ କରୁଛ ? ହେ ଇଶ୍ରାୟେଲ, ତୁମ୍ଭେ କାହିଁକି ଏହା ପ୍ରଚାର କରୁଛ ? ମାରେପଥ, ସଦାପ୍ରଭୁଙ୍କଠାରୁ ଗୁପ୍ତ ବୋଲି ଓ ମାରେ ବିଚାର ପରମେଶ୍ବରଙ୍କର ଜ୍ଞାନର ଅତୀତ ବୋଲି କହୁଅଛି।'

Jeremiah 4:2
ଯଦି ତୁମ୍ଭେ ସହେିସବୁ କରିବ, ତବେେ ତୁମ୍ଭକୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନାମ ରେ ଶପଥ କରି କହିବାକୁ ପଡ଼ିବ ଯେ 'ସଦାପ୍ରଭୁ ଜୀବିତ।' ଆଉ ତୁମ୍ଭେ ଏସବୁ ସତ୍ଯ, ନ୍ଯାଯ ଓ ଧାର୍ମିକତା ରେ ସେ ସବୁ କହିବାକୁ କ୍ଷମ ହବେ। ତାହାଦ୍ବାରା ନାନାଦେଶୀଯମାନେ ସଦାପ୍ରଭୁଙ୍କର ଆଶୀର୍ବାଦର ପାତ୍ର ହବେେ। ସମାନେେ ଗର୍ବର ସହିତ କହିବେ ସଦାପ୍ରଭୁ ତାହା କରିଛନ୍ତି।

Jeremiah 5:2
ସମାନେେ, 'ଜୀବତ୍ ସଦାପ୍ରଭୁ' କହିଲେ ହେଁ ନିତାନ୍ତ ମିଥ୍ଯା ରେ ଶପଥ କରନ୍ତି।

Jeremiah 12:16
ଆମ୍ଭେ ଚାହୁଁ ସହେି ଲୋକମାନେ ଉତ୍ତମ ଶିକ୍ଷା ଲାଭ କରନ୍ତୁ। ଅତୀତ ରେ ସମାନେେ ଯେପରି ବାଲ୍ଦବେ ନାମ ରେ ଶପଥ କରିବା ପାଇଁ ଆମ୍ଭ ଲୋକମାନଙ୍କୁ ଶିଖାଇଲେ, ସହେିପରି 'ସଦାପ୍ରଭୁ ଜୀବିତ' ବୋଲି ଆମ୍ଭ ନାମ ରେ ଶପଥ କରିବା ପାଇଁ ଯବେେ ଆମ୍ଭର ଲୋକମାନଙ୍କୁ ଯତ୍ନ ପୂର୍ବକ ଶିଖାଇବେ, ତବେେ ଆମ୍ଭ ଲୋକମାନଙ୍କ ସହିତ ବାସ କରିବେ।

Ezekiel 33:11
ତବେେ ତୁମ୍ଭେ ସମାନଙ୍କେୁ କୁହ, 'ସଦାପ୍ରଭୁ, ମାରେ ପ୍ରଭୁ କହନ୍ତି, ଆମ୍ଭେ ଜୀବିତ ଥିବା ପ୍ରମାଣେ ଦୁଷ୍ଟର ମରଣ ରେ ଆମ୍ଭର ସନ୍ତାଷେ ନାହିଁା କିନ୍ତୁ ଦୁଷ୍ଟ ଯେପରି ନିଜ ପାପ ପଥରୁ ନିବୃତ୍ତ ହାଇେ ବଞ୍ଚେ, ସେଥି ରେ ଆମ୍ଭେ ସନ୍ତାଷେ ଲାଭ କରୁ। ତେଣୁ ତୁମ୍ଭମାନେେ ନିଜ ନିଜ କୁପଥରୁ ଫରେ ଓ ମାରେ ନିକଟବର୍ତ୍ତୀ ହୁଅ। ହେ ଇଶ୍ରାୟେଲ ବଂଶ ତୁମ୍ଭେ କାହିଁକି ମରିବ ?'

Job 9:18
ପରମେଶ୍ବର ମାେତେ ପୁନର୍ବାର ନିଶ୍ବାସ ନବୋକୁ ଦବେେ ନାହିଁ, କିନ୍ତୁ ଅଧିକ କଷ୍ଟ ଦବେେ।

1 Kings 18:15
ଏଲିଯ ଉତ୍ତର କଲେ, ସର୍ବଶକ୍ତିମଯ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଜୀବିତ ଥିବା ପର୍ୟ୍ଯନ୍ତ ମୁଁ ପ୍ରତିଜ୍ଞା କରୁଛି, ମୁଁ ନିଶ୍ଚଯ ରାଜାଙ୍କୁ ଆଜି ଦଖାେ କରିବି।

Ruth 3:13
ଆଜି ରାତି ଏହିଠା ରେ ରକ୍ସ୍ଟହ। ଆସନ୍ତା କାଲି ସକାଳେ ମୁ ଦେଖିବି ଯେ, ସେ ତୁମ୍ଭକୁ ବିବାହ କରିବାକୁ ଇଚ୍ଛା କରୁଛି କି ନା, ଯଦି ସେ ରାଜି ହକ୍ସ୍ଟଅନ୍ତି ତବେେ ଉତ୍ତମ କଥା। ଯବେେ ସେ ବିବାହ କରିବାକୁ ମନା କରନ୍ତି, ସଦାପ୍ରଭୁଙ୍କର ନାମ ରେ ପ୍ରତିଜ୍ଞା କରୁଅଛି, ମୁ ତୁମ୍ଭକୁ ବିବାହ କରିବି ଏବଂ ଏଲିମଲକରେ ଭୂମି ଫରୋଇ ଆଣିବି। ତେଣୁ ସକାଳ ପର୍ୟ୍ଯନ୍ତ ଏହିଠା ରେ ଶଯନ କର।

1 Samuel 14:39
ମୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ପାଖ ରେ ପ୍ରତିଜ୍ଞା କରୁଛି ୟିଏ ପାପ କରିଛି, ଏପରିକି ମାେ ପକ୍ସ୍ଟଅ ହାଇେଥିଲେ ବି ମୃତକ୍ସ୍ଟ୍ଯଦଣ୍ତ ରେ ଦଣ୍ତିତ ହବେ। ସମସ୍ତେ ନୀରବଦ୍ରଷ୍ଟା ରହିଲେ।

1 Samuel 14:45
ଏଥର ସୈନ୍ଯମାନେ ଶାଉଲଙ୍କକ୍ସ୍ଟ କହିଲେ,ଯୋନାଥନ ଆଜି ଇଶ୍ରାୟେଲକକ୍ସ୍ଟ ମହାଉଦ୍ଧାର କରିଛନ୍ତି। ଯୋନାଥନ ମରିବ, ଏହା କବେେ ହାଇେ ନ ପା ରେ। ଆମ୍ଭେ ଜୀବିତ ପରମେଶ୍ବରଙ୍କ ପାଖ ରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛକ୍ସ୍ଟ, କହେି ଯୋନାଥନଙ୍କକ୍ସ୍ଟ ହତ୍ଯା ତ ଦୂରର କଥା ମକ୍ସ୍ଟଣ୍ତରକ୍ସ୍ଟ ଗୋଟିଏ କେଶ ମଧ୍ଯ ତଳେ ପଡିବାକକ୍ସ୍ଟ ଦବେକ୍ସ୍ଟ ନାହିଁ। ପରମେଶ୍ବର ପଲେଷ୍ଟୀୟ କବଳରକ୍ସ୍ଟ ଇଶ୍ରାୟେଲକକ୍ସ୍ଟ ଉଦ୍ଧାର ପାଇଁ ଯୋନାଥନଙ୍କକ୍ସ୍ଟ ସାହାୟ୍ଯ କରିଛନ୍ତି। ତେଣୁ ଲୋକମାନ ଯୋନାଥନଙ୍କକ୍ସ୍ଟ ସାହାୟ୍ଯ କରିବେ, ତାଙ୍କୁ କବେେ ବି ହତ୍ଯା କରିବା ପାଇଁ ଦିଆୟିବ ନାହିଁ।

1 Samuel 20:21
ତା'ପରେ ମୁ ସେ ପିଲାକକ୍ସ୍ଟ ତୀରଗକ୍ସ୍ଟଡିକ ସାଉଁଟି ଆଣିବା ପାଇଁ କହିବି। ଯଦି ସବୁକଥା ଭଲ ଥାଏ, ତବେେ ମୁ ସେ ପିଲାକକ୍ସ୍ଟ କହିବି, 'ତୁମ୍ଭେ ବହକ୍ସ୍ଟତ ଦୂରକକ୍ସ୍ଟ ୟାଇଅଛ ତୀରଗକ୍ସ୍ଟଡିକ ମାେ ପାଖାପାଖି ଅଛି। ଫରେିଆସ ଏବଂ ସଗେକ୍ସ୍ଟଡିକ ସଂଗ୍ରହ କର।' ଯଦି ମୁ ଏହା କ ହେ, ତବେେ ତୁମ୍ଭେ ସଠାେରକ୍ସ୍ଟ ବାହାରି ଆସିବ। ମୁ ପ୍ରତିଜ୍ଞା କରୁଛି, ସଦାପ୍ରଭୁ ଜୀବିତ ଥିବା ପର୍ୟ୍ଯନ୍ତ ତୁମ୍ଭେ ନିରାପଦ, ତକ୍ସ୍ଟମ୍ଭ ଉପରେ ବିପଦ ନାହିଁ।

1 Samuel 25:26
ହେ ମାରେ ପ୍ରଭକ୍ସ୍ଟ, ସଦାପ୍ରଭୁ ତ ଆପଣଙ୍କକ୍ସ୍ଟ ନିରୀହ ଲୋକମାନଙ୍କର ରକ୍ତପାତ ବାରଣ କଲେ। ତେଣୁ ସଦାପ୍ରଭୁ ଜୀବିତ ଥିବା ପ୍ରମାଣେ ଓ ତୁମ୍ଭେ ଜୀବିତ ଥିବା ୟାଏଁ ତୁମ୍ଭର ଶତୃମାନେ ଯେଉଁମାନେ ତୁମ୍ଭର କ୍ଷତି କରିବାପାଇଁ ଗ୍ଭହାନ୍ତି, ସମାନେେ ନାବଲ୍ ପରି ହକ୍ସ୍ଟଅନ୍ତକ୍ସ୍ଟ।

1 Samuel 25:34
ସଦାପ୍ରଭୁ ମାେତେ ତୁମ୍ଭକୁ ଆଘାତ କରିବାରକ୍ସ୍ଟ ବାରଣ କଲେ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଦାପ୍ରଭୁ ଇଶ୍ରାୟେଲର ପରମେଶ୍ବର ଯେ ପର୍ୟ୍ଯନ୍ତ ଅଛନ୍ତି, ଯଦି ତୁମ୍ଭେ ମାେତେ ସାକ୍ଷାତ କରିବା ପାଇଁ ଶିଘ୍ର ଆସି ନଥାନ୍ତ, ପ୍ରତକ୍ସ୍ଟ୍ଯଷ ବଳକେକ୍ସ୍ଟ ନାବଲ ପରିବାର କହେି ଜଣେ ପୁରୁଷ ଜୀବିତ ରହି ନଥାନ୍ତା।

2 Samuel 2:27
ତା'ପରେ ଯୋୟାବ କହିଲା, ତୁମ୍ଭେ ଗୋଟିଏ ଭଲ କଥା କହିଲ, ପରମେଶ୍ବର ଜୀବିତ ଥିବା ପ୍ରମାଣେ, ଯଦି ତୁମ୍ଭେ ଏହାପରି କହି ନଥାନ୍ତ, ଲୋକମାନେ ସମାନଙ୍କେର ନିଜର ଭାଇମାନଙ୍କ ପଛ ରେ ପ୍ରଭାତ ପର୍ୟ୍ଯନ୍ତ ଗୋଡାଉ ଥାନ୍ତେ।

1 Kings 17:1
ଏଲିଯ ତିସ୍ବୀଯର ଭବିଷ୍ଯତ ବକ୍ତା ଗିଲିଯଦ ରେ ରାଜା ଆହାବ୍ଙ୍କୁ କହିଲେ, ଗିଲିଯଦର ପ୍ରବାସୀ ତିସ୍ବୀଯ ଏଲିଯ ଭବିଷ୍ଯଦ୍ବକ୍ତା ରାଜା ଆହାବ୍ଙ୍କୁ କହିଲେ, ମୁଁ ସଦାପ୍ରଭୁ ଇଶ୍ରାୟେଲର ପରମେଶ୍ବରଙ୍କର ସବୋ କରେ। ତାଙ୍କର ଶକ୍ତି ଅନୁସାରେ ମୁଁ ପ୍ରତିଜ୍ଞା କରୁଛି ଆସନ୍ତା କିଛି ବର୍ଷ ଦେଶ ରେ କାକର କି ବୃଷ୍ଟିପାତ ହବେନାହିଁ। ଯଦି ମୁଁ ଆଦେଶ ଦିଏ ତବେେ ବର୍ଷା ହବେ।

Ruth 1:20
କିନ୍ତୁ ବନୟମୀ ସହେି ଲୋକମାନଙ୍କୁ କହିଲେ, ମାେତେ ନୟମୀ ବୋଲି ଡାକ ନାହିଁ, ମାେତେ ମାରା ବୋଲି ଡାକ। ଯହେିତକ୍ସ୍ଟ ସର୍ବଶକ୍ତିମାନ ପରମେଶ୍ବର ମାରେ ଜୀବନକକ୍ସ୍ଟ ଦକ୍ସ୍ଟଃଖପୂର୍ଣ କରିଅଛନ୍ତି।