Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 3 எசேக்கியேல் 3:27

எசேக்கியேல் 3:27
நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

Tamil Indian Revised Version
நான் உன்னுடன் பேசும்போது, உன்னுடைய வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதைச் சொன்னார் என்று அவர்களுடன் சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேட்காதவன் கேட்காமல் இருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் உன்னிடம் பேசுவேன். பின்னர் நான் உன்னைப் பேச அனுமதிப்பேன். ஆனால் நீ அவர்களிடம் பேச வேண்டும். ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்.’ ஒருவன் இதனைக் கேட்க விரும்பினால் நல்லது. ஒருவன் கேட்க விரும்பாவிட்டாலும் நல்லது. ஆனால் அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர்.

திருவிவிலியம்
ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம் “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்று சொல். கேட்பவன் கேட்கட்டும்; மறுப்பவன் மறுக்கட்டும்; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.

Ezekiel 3:26Ezekiel 3

King James Version (KJV)
But when I speak with thee, I will open thy mouth, and thou shalt say unto them, Thus saith the Lord GOD; He that heareth, let him hear; and he that forbeareth, let him forbear: for they are a rebellious house.

American Standard Version (ASV)
But when I speak with thee, I will open thy mouth, and thou shalt say unto them, Thus saith the Lord Jehovah: He that heareth, let him hear; and he that forbeareth, let him forbear: for they are a rebellious house.

Bible in Basic English (BBE)
But when I have talk with you I will make your mouth open, and you are to say to them, This is what the Lord has said: Let the hearer give ear; and as for him who will not, let him keep his ears shut: for they are an uncontrolled people.

Darby English Bible (DBY)
And when I speak with thee, I will open thy mouth, and thou shalt say unto them, Thus saith the Lord Jehovah: He that heareth, let him hear; and he that forbeareth, let him forbear: for they are a rebellious house.

World English Bible (WEB)
But when I speak with you, I will open your mouth, and you shall tell them, Thus says the Lord Yahweh: He who hears, let him hear; and he who forbears, let him forbear: for they are a rebellious house.

Young’s Literal Translation (YLT)
And in My speaking with thee, I do open thy mouth, and thou hast said unto them: Thus said the Lord Jehovah; the hearer doth hear, and the forbearer doth forbear; for a rebellious house `are’ they.

எசேக்கியேல் Ezekiel 3:27
நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.
But when I speak with thee, I will open thy mouth, and thou shalt say unto them, Thus saith the Lord GOD; He that heareth, let him hear; and he that forbeareth, let him forbear: for they are a rebellious house.

וּֽבְדַבְּרִ֤יûbĕdabbĕrîoo-veh-da-beh-REE
אֽוֹתְךָ֙ʾôtĕkāoh-teh-HA
אֶפְתַּ֣חʾeptaḥef-TAHK
אֶתʾetet
פִּ֔יךָpîkāPEE-ha
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
כֹּ֥הkoh
אָמַ֖רʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִֹ֑הyĕhôiyeh-hoh-EE
הַשֹּׁמֵ֤עַ׀haššōmēaʿha-shoh-MAY-ah
יִשְׁמָע֙yišmāʿyeesh-MA
וְהֶחָדֵ֣ל׀wĕheḥādēlveh-heh-ha-DALE
יֶחְדָּ֔לyeḥdālyek-DAHL
כִּ֛יkee
בֵּ֥יתbêtbate
מְרִ֖יmĕrîmeh-REE
הֵֽמָּה׃hēmmâHAY-ma

இணை வசனம்

Ezekiel 12:2
மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

Ezekiel 24:27
அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.

Ezekiel 3:11
நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

Ezekiel 29:21
அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

Revelation 22:10
பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.

Ephesians 6:19
சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,

Luke 21:15
உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Matthew 13:9
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

Matthew 11:15
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

Ezekiel 33:32
இதோ நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.

Ezekiel 33:22
தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மெளனமாயிருக்கவில்லை.

Ezekiel 11:25
கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

Ezekiel 3:26
நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.

Ezekiel 3:9
உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.

Ezekiel 2:5
கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.

Exodus 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?


Tags நான் உன்னோடே பேசும்போது உன் வாயைத் திறப்பேன் அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய் கேட்கிறவன் கேட்கட்டும் கேளாதவன் கேளாதிருக்கட்டும் அவர்கள் கலகவீட்டார்
எசேக்கியேல் 3:27 Concordance எசேக்கியேல் 3:27 Interlinear எசேக்கியேல் 3:27 Image