Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 51:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 51 ஏசாயா 51:17

ஏசாயா 51:17
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

Tamil Indian Revised Version
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

Tamil Easy Reading Version
எழும்பு! எழும்பு! எருசலேமே எழும்பு! கர்த்தர் உன் மீது மிகவும் கோபமாய் இருந்தார். எனவே, நீங்கள் தண்டிக்கப்பட்டீர்கள். உங்களுக்கான இந்தத் தண்டனையானது ஒரு கிண்ணம் விஷத்தை குடிக்க வேண்டியதுபோல இருந்தது. நீங்கள் அதைக் குடித்தீர்கள்.

திருவிவிலியம்
⁽விழித்தெழு, விழித்தெழு,␢ ஆண்டவர் கையினின்று,␢ சினக் கிண்ணத்தைக் குடித்தவளே,␢ மதியை மயக்கும் அக்கிண்ணத்தை␢ அடிமண்டிவரை குடித்தவளே,␢ எருசலேமே, எழுந்து நில்.⁾

Title
தேவன் இஸ்ரவேலைத் தண்டித்தார்

Other Title
எருசலேமின் துன்பம் தீர்தல்

Isaiah 51:16Isaiah 51Isaiah 51:18

King James Version (KJV)
Awake, awake, stand up, O Jerusalem, which hast drunk at the hand of the LORD the cup of his fury; thou hast drunken the dregs of the cup of trembling, and wrung them out.

American Standard Version (ASV)
Awake, awake, stand up, O Jerusalem, that hast drunk at the hand of Jehovah the cup of his wrath; thou hast drunken the bowl of the cup of staggering, and drained it.

Bible in Basic English (BBE)
Awake! awake! up! O Jerusalem, you who have taken from the Lord’s hand the cup of his wrath; tasting in full measure the wine which overcomes.

Darby English Bible (DBY)
Arouse thyself, arouse thyself, stand up, Jerusalem, which hast drunk at the hand of Jehovah the cup of his fury. Thou hast drunk, hast drained out the goblet-cup of bewilderment:

World English Bible (WEB)
Awake, awake, stand up, Jerusalem, that have drunk at the hand of Yahweh the cup of his wrath; you have drunken the bowl of the cup of staggering, and drained it.

Young’s Literal Translation (YLT)
Stir thyself, stir thyself, rise, Jerusalem, Who hast drunk from the hand of Jehovah The cup of His fury, The goblet, the cup of trembling, thou hast drunk, Thou hast wrung out.

ஏசாயா Isaiah 51:17
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
Awake, awake, stand up, O Jerusalem, which hast drunk at the hand of the LORD the cup of his fury; thou hast drunken the dregs of the cup of trembling, and wrung them out.

הִתְעוֹרְרִ֣יhitʿôrĕrîheet-oh-reh-REE
הִֽתְעוֹרְרִ֗יhitĕʿôrĕrîhee-teh-oh-reh-REE
ק֚וּמִיqûmîKOO-mee
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
שָׁתִ֛יתšātîtsha-TEET
מִיַּ֥דmiyyadmee-YAHD
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
כּ֣וֹסkôskose
חֲמָת֑וֹḥămātôhuh-ma-TOH
אֶתʾetet
קֻבַּ֜עַתqubbaʿatkoo-BA-at
כּ֧וֹסkôskose
הַתַּרְעֵלָ֛הhattarʿēlâha-tahr-ay-LA
שָׁתִ֖יתšātîtsha-TEET
מָצִֽית׃māṣîtma-TSEET

இணை வசனம்

Isaiah 52:1
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

Job 21:20
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.

Revelation 14:10
அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

Psalm 60:3
உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

Psalm 11:6
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

Zechariah 12:2
இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.

1 Corinthians 15:34
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

Revelation 18:6
அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

Revelation 16:19
அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.

Ephesians 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

Deuteronomy 28:34
உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.

Judges 5:12
விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ.

Psalm 75:8
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

Psalm 75:10
துன்மார்க்கருடைய கொம்பρகளையெல்லாம் வெΟ்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

Isaiah 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

Jeremiah 25:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,

Jeremiah 25:27
நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.

Ezekiel 23:31
உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன்.

Deuteronomy 28:28
கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.


Tags எழும்பு எழும்பு கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே எழுந்துநில் தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்
ஏசாயா 51:17 Concordance ஏசாயா 51:17 Interlinear ஏசாயா 51:17 Image