அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி,
சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்று போடுவான்.
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| now, | נָ֠א | nāʾ | na |
| thy servant | מָצָ֨א | māṣāʾ | ma-TSA |
| hath found | עַבְדְּךָ֣ | ʿabdĕkā | av-deh-HA |
| grace | חֵן֮ | ḥēn | hane |
| in thy sight, | בְּעֵינֶיךָ֒ | bĕʿênêkā | beh-ay-nay-HA |
| and thou hast magnified | וַתַּגְדֵּ֣ל | wattagdēl | va-tahɡ-DALE |
| thy mercy, | חַסְדְּךָ֗ | ḥasdĕkā | hahs-deh-HA |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| thou hast shewed | עָשִׂ֙יתָ֙ | ʿāśîtā | ah-SEE-TA |
| unto me | עִמָּדִ֔י | ʿimmādî | ee-ma-DEE |
| in saving | לְהַֽחֲי֖וֹת | lĕhaḥăyôt | leh-ha-huh-YOTE |
| אֶת | ʾet | et | |
| my life; | נַפְשִׁ֑י | napšî | nahf-SHEE |
| and I | וְאָֽנֹכִ֗י | wĕʾānōkî | veh-ah-noh-HEE |
| cannot | לֹ֤א | lōʾ | loh |
| אוּכַל֙ | ʾûkal | oo-HAHL | |
| escape | לְהִמָּלֵ֣ט | lĕhimmālēṭ | leh-hee-ma-LATE |
| to the mountain, | הָהָ֔רָה | hāhārâ | ha-HA-ra |
| lest | פֶּן | pen | pen |
| some evil | תִּדְבָּקַ֥נִי | tidbāqanî | teed-ba-KA-nee |
| take | הָֽרָעָ֖ה | hārāʿâ | ha-ra-AH |
| me, and I die: | וָמַֽתִּי׃ | wāmattî | va-MA-tee |