கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.
ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
| So Abraham | וַיָּ֤שָׁב | wayyāšob | va-YA-shove |
| returned | אַבְרָהָם֙ | ʾabrāhām | av-ra-HAHM |
| unto | אֶל | ʾel | el |
| his young men, | נְעָרָ֔יו | nĕʿārāyw | neh-ah-RAV |
| and they rose up | וַיָּקֻ֛מוּ | wayyāqumû | va-ya-KOO-moo |
| and went | וַיֵּֽלְכ֥וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| together | יַחְדָּ֖ו | yaḥdāw | yahk-DAHV |
| to | אֶל | ʾel | el |
| Beer-sheba; | בְּאֵ֣ר | bĕʾēr | beh-ARE |
| and Abraham | שָׁ֑בַע | šābaʿ | SHA-va |
| dwelt | וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| at Beer-sheba. | אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM |
| בִּבְאֵ֥ר | bibʾēr | beev-ARE | |
| שָֽׁבַע׃ | šābaʿ | SHA-va |