சூழல் வசனங்கள் யாத்திராகமம் 3:15
யாத்திராகமம் 3:1

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

אֶל
யாத்திராகமம் 3:4

அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

אֱלֹהִ֜ים
யாத்திராகமம் 3:6

பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

אֱלֹהֵ֣י, אֱלֹהֵ֥י, אֶל
யாத்திராகமம் 3:8

அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.

אֶל, אֶל, אֶל
யாத்திராகமம் 3:10

நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

אֶל
யாத்திராகமம் 3:11

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.

אֶל, אֶל
யாத்திராகமம் 3:13

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

אֶל, אֶל, בְּנֵ֣י, יִשְׂרָאֵל֒, אֱלֹהֵ֥י, שְׁלָחַ֣נִי, אֲלֵיכֶ֑ם
யாத்திராகமம் 3:14

அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

אֶל
யாத்திராகமம் 3:16

நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,

יְהוָ֞ה
யாத்திராகமம் 3:17

நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.

אֶל, אֶל
யாத்திராகமம் 3:18

அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.

אֶל, יְהוָ֞ה
And
God
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
said
ע֨וֹדʿôdode
moreover
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Thus
כֹּֽהkoh
shalt
thou
say
תֹאמַר֮tōʾmartoh-MAHR
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
The
Lord
יְהוָ֞הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
your
fathers,
אֲבֹֽתֵיכֶ֗םʾăbōtêkemuh-voh-tay-HEM
the
God
אֱלֹהֵ֨יʾĕlōhêay-loh-HAY
of
Abraham,
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
the
God
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
of
Isaac,
יִצְחָ֛קyiṣḥāqyeets-HAHK
and
the
God
וֵֽאלֹהֵ֥יwēʾlōhêvay-loh-HAY
of
Jacob,
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
hath
sent
שְׁלָחַ֣נִיšĕlāḥanîsheh-la-HA-nee
me
unto
אֲלֵיכֶ֑םʾălêkemuh-lay-HEM
you:
this
זֶהzezeh
is
my
name
שְּׁמִ֣יšĕmîsheh-MEE
for
ever,
לְעֹלָ֔םlĕʿōlāmleh-oh-LAHM
and
this
וְזֶ֥הwĕzeveh-ZEH
is
my
memorial
זִכְרִ֖יzikrîzeek-REE
unto
all
לְדֹ֥רlĕdōrleh-DORE
generations.
דֹּֽר׃dōrdore