அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.
இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.
அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.
நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.
ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்று சொல் என்றார்.
தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.
ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
| Tell | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| אֱמֹ֣ר | ʾĕmōr | ay-MORE | |
| them therefore, | אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM |
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַר֮ | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִה֒ | yĕhwih | yeh-VEE |
| I will make this | הִשְׁבַּ֙תִּי֙ | hišbattiy | heesh-BA-TEE |
| proverb | אֶת | ʾet | et |
| הַמָּשָׁ֣ל | hammāšāl | ha-ma-SHAHL | |
| to cease, | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| and they shall no | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| more | יִמְשְׁל֥וּ | yimšĕlû | yeem-sheh-LOO |
| use it as a proverb | אֹת֛וֹ | ʾōtô | oh-TOH |
| ע֖וֹד | ʿôd | ode | |
| in Israel; | בְּיִשְׂרָאֵ֑ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| but | כִּ֚י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| say | דַּבֵּ֣ר | dabbēr | da-BARE |
| unto | אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, The days | קָֽרְבוּ֙ | qārĕbû | ka-reh-VOO |
| are at hand, | הַיָּמִ֔ים | hayyāmîm | ha-ya-MEEM |
| and the effect | וּדְבַ֖ר | ûdĕbar | oo-deh-VAHR |
| of every | כָּל | kāl | kahl |
| vision. | חָזֽוֹן׃ | ḥāzôn | ha-ZONE |