மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்துவிழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய் கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.
அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,
நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.
| And will ye pollute | וַתְּחַלֶּלְ֨נָה | wattĕḥallelnâ | va-teh-ha-lel-na |
| me among | אֹתִ֜י | ʾōtî | oh-TEE |
| my people | אֶל | ʾel | el |
| for handfuls | עַמִּ֗י | ʿammî | ah-MEE |
| of barley | בְּשַׁעֲלֵ֣י | bĕšaʿălê | beh-sha-uh-LAY |
| and for pieces | שְׂעֹרִים֮ | śĕʿōrîm | seh-oh-REEM |
| of bread, | וּבִפְת֣וֹתֵי | ûbiptôtê | oo-veef-TOH-tay |
| to slay | לֶחֶם֒ | leḥem | leh-HEM |
| the souls | לְהָמִ֤ית | lĕhāmît | leh-ha-MEET |
| that | נְפָשׁוֹת֙ | nĕpāšôt | neh-fa-SHOTE |
| should not | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| die, | לֹֽא | lōʾ | loh |
| and to save | תְמוּתֶ֔נָה | tĕmûtenâ | teh-moo-TEH-na |
| the souls | וּלְחַיּ֥וֹת | ûlĕḥayyôt | oo-leh-HA-yote |
| alive that | נְפָשׁ֖וֹת | nĕpāšôt | neh-fa-SHOTE |
| should not | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| live, | לֹא | lōʾ | loh |
| by your lying | תִֽחְיֶ֑ינָה | tiḥĕyênâ | tee-heh-YAY-na |
| to my people | בְּכַ֨זֶּבְכֶ֔ם | bĕkazzebkem | beh-HA-zev-HEM |
| that hear | לְעַמִּ֖י | lĕʿammî | leh-ah-MEE |
| your lies? | שֹׁמְעֵ֥י | šōmĕʿê | shoh-meh-A |
| כָזָֽב׃ | kāzāb | ha-ZAHV |