நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.
கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.
| And they shall no | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| more | יִהְי֨וּ | yihyû | yee-YOO |
| be | ע֥וֹד | ʿôd | ode |
| a prey | בַּז֙ | baz | bahz |
| to the heathen, | לַגּוֹיִ֔ם | laggôyim | la-ɡoh-YEEM |
| neither | וְחַיַּ֥ת | wĕḥayyat | veh-ha-YAHT |
| shall the beast | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| of the land | לֹ֣א | lōʾ | loh |
| devour | תֹאכְלֵ֑ם | tōʾkĕlēm | toh-heh-LAME |
| them; but they shall dwell | וְיָשְׁב֥וּ | wĕyošbû | veh-yohsh-VOO |
| safely, | לָבֶ֖טַח | lābeṭaḥ | la-VEH-tahk |
| and none | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| shall make them afraid. | מַחֲרִֽיד׃ | maḥărîd | ma-huh-REED |