ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.
அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்தபொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.
தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.
தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.
பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.
தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.
| And the God | וֵֽאלָהָ֞א | wēʾlāhāʾ | vay-la-HA |
| that | דִּ֣י | dî | dee |
| hath caused his name | שַׁכִּ֧ן | šakkin | sha-KEEN |
| to dwell | שְׁמֵ֣הּ | šĕmēh | sheh-MAY |
| there | תַּמָּ֗ה | tammâ | ta-MA |
| destroy | יְמַגַּ֞ר | yĕmaggar | yeh-ma-ɡAHR |
| all | כָּל | kāl | kahl |
| kings | מֶ֤לֶךְ | melek | MEH-lek |
| and people, | וְעַם֙ | wĕʿam | veh-AM |
| that | דִּ֣י׀ | dî | dee |
| shall put | יִשְׁלַ֣ח | yišlaḥ | yeesh-LAHK |
| to their hand | יְדֵ֗הּ | yĕdēh | yeh-DAY |
| to alter | לְהַשְׁנָיָ֛ה | lĕhašnāyâ | leh-hahsh-na-YA |
| and to destroy | לְחַבָּלָ֛ה | lĕḥabbālâ | leh-ha-ba-LA |
| this | בֵּית | bêt | bate |
| house | אֱלָהָ֥א | ʾĕlāhāʾ | ay-la-HA |
| of God | דֵ֖ךְ | dēk | dake |
| which | דִּ֣י | dî | dee |
| is at Jerusalem. | בִירֽוּשְׁלֶ֑ם | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
| I | אֲנָ֤ה | ʾănâ | uh-NA |
| Darius | דָֽרְיָ֙וֶשׁ֙ | dārĕyāweš | da-reh-YA-VESH |
| have made | שָׂ֣מֶת | śāmet | SA-met |
| a decree; | טְעֵ֔ם | ṭĕʿēm | teh-AME |
| let it be done | אָסְפַּ֖רְנָא | ʾosparnāʾ | ose-PAHR-na |
| with speed. | יִתְעֲבִֽד׃ | yitʿăbid | yeet-uh-VEED |