ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.
அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.
அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்தபொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.
அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.
தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.
தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.
பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.
| And the elders | וְשָׂבֵ֤י | wĕśābê | veh-sa-VAY |
| of the Jews | יְהֽוּדָיֵא֙ | yĕhûdāyēʾ | yeh-hoo-da-YAY |
| builded, | בָּנַ֣יִן | bānayin | ba-NA-yeen |
| and they prospered | וּמַצְלְחִ֔ין | ûmaṣlĕḥîn | oo-mahts-leh-HEEN |
| through the prophesying | בִּנְבוּאַת֙ | binbûʾat | been-voo-AT |
| of Haggai | חַגַּ֣י | ḥaggay | ha-ɡAI |
| the prophet | נְבִיָּ֔אה | nĕbiyyāʾ | neh-vee-YA |
| and Zechariah | וּזְכַרְיָ֖ה | ûzĕkaryâ | oo-zeh-hahr-YA |
| the son | בַּר | bar | bahr |
| of Iddo. | עִדּ֑וֹא | ʿiddôʾ | EE-doh |
| And they builded, | וּבְנ֣וֹ | ûbĕnô | oo-veh-NOH |
| and finished | וְשַׁכְלִ֗לוּ | wĕšaklilû | veh-shahk-LEE-loo |
| it, according | מִן | min | meen |
| to the commandment | טַ֙עַם֙ | ṭaʿam | TA-AM |
| of the God | אֱלָ֣הּ | ʾĕlāh | ay-LA |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and according to the commandment | וּמִטְּעֵם֙ | ûmiṭṭĕʿēm | oo-mee-teh-AME |
| of Cyrus, | כּ֣וֹרֶשׁ | kôreš | KOH-resh |
| and Darius, | וְדָֽרְיָ֔וֶשׁ | wĕdārĕyāweš | veh-da-reh-YA-vesh |
| and Artaxerxes | וְאַרְתַּחְשַׁ֖שְׂתְּא | wĕʾartaḥšaśtĕʾ | veh-ar-tahk-SHAHS-teh |
| king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| of Persia. | פָּרָֽס׃ | pārās | pa-RAHS |