ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:
இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.
உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
| Then Zerubbabel | וַיִּשְׁמַ֣ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| the son | זְרֻבָּבֶ֣ל׀ | zĕrubbābel | zeh-roo-ba-VEL |
| of Shealtiel, | בֶּֽן | ben | ben |
| and Joshua | שַׁלְתִּיאֵ֡ל | šaltîʾēl | shahl-tee-ALE |
| the son | וִיהוֹשֻׁ֣עַ | wîhôšuaʿ | vee-hoh-SHOO-ah |
| of Josedech, | בֶּן | ben | ben |
| the high | יְהוֹצָדָק֩ | yĕhôṣādāq | yeh-hoh-tsa-DAHK |
| priest, | הַכֹּהֵ֨ן | hakkōhēn | ha-koh-HANE |
| with all | הַגָּד֜וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| the remnant | וְכֹ֣ל׀ | wĕkōl | veh-HOLE |
| of the people, | שְׁאֵרִ֣ית | šĕʾērît | sheh-ay-REET |
| obeyed | הָעָ֗ם | hāʿām | ha-AM |
| the voice | בְּקוֹל֙ | bĕqôl | beh-KOLE |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| their God, | אֱלֹֽהֵיהֶ֔ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| and the words | וְעַל | wĕʿal | veh-AL |
| of Haggai | דִּבְרֵי֙ | dibrēy | deev-RAY |
| the prophet, | חַגַּ֣י | ḥaggay | ha-ɡAI |
| as | הַנָּבִ֔יא | hannābîʾ | ha-na-VEE |
| the Lord | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| their God | שְׁלָח֖וֹ | šĕlāḥô | sheh-la-HOH |
| had sent | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| him, and the people | אֱלֹהֵיהֶ֑ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| did fear | וַיִּֽירְא֥וּ | wayyîrĕʾû | va-yee-reh-OO |
| before | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| the Lord. | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |