பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.
| In a little | בְּשֶׁ֣צֶף | bĕšeṣep | beh-SHEH-tsef |
| wrath | קֶ֗צֶף | qeṣep | KEH-tsef |
| I hid | הִסְתַּ֨רְתִּי | histartî | hees-TAHR-tee |
| my face | פָנַ֥י | pānay | fa-NAI |
| from | רֶ֙גַע֙ | regaʿ | REH-ɡA |
| thee for a moment; | מִמֵּ֔ךְ | mimmēk | mee-MAKE |
| but with everlasting | וּבְחֶ֥סֶד | ûbĕḥesed | oo-veh-HEH-sed |
| kindness | עוֹלָ֖ם | ʿôlām | oh-LAHM |
| will I have mercy | רִֽחַמְתִּ֑יךְ | riḥamtîk | ree-hahm-TEEK |
| on thee, saith | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | גֹּאֲלֵ֖ךְ | gōʾălēk | ɡoh-uh-LAKE |
| thy Redeemer. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |