இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்ன வார்த்தைகளே.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக்கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை உணர்ந்து கொள்ளுவீர்கள்.
| For, | כִּ֠י | kî | kee |
| lo, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| the days | יָמִ֤ים | yāmîm | ya-MEEM |
| come, | בָּאִים֙ | bāʾîm | ba-EEM |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| that I will bring again | וְ֠שַׁבְתִּי | wĕšabtî | VEH-shahv-tee |
| אֶת | ʾet | et | |
| the captivity | שְׁב֨וּת | šĕbût | sheh-VOOT |
| of my people | עַמִּ֧י | ʿammî | ah-MEE |
| Israel | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and Judah, | וִֽיהוּדָ֖ה | wîhûdâ | vee-hoo-DA |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and I will cause them to return | וַהֲשִׁבֹתִ֗ים | wahăšibōtîm | va-huh-shee-voh-TEEM |
| to | אֶל | ʾel | el |
| the land | הָאָ֛רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I gave | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
| to their fathers, | לַאֲבוֹתָ֖ם | laʾăbôtām | la-uh-voh-TAHM |
| and they shall possess | וִֽירֵשֽׁוּהָ׃ | wîrēšûhā | VEE-ray-SHOO-ha |