சூழல் வசனங்கள் லேவியராகமம் 4:34
லேவியராகமம் 4:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
லேவியராகமம் 4:2

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:

אֶל
லேவியராகமம் 4:4

அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

אֶל, עַל
லேவியராகமம் 4:5

அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,

אֶל
லேவியராகமம் 4:7

பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

עַל, כָּל, אֶל, מִזְבַּ֣ח
லேவியராகமம் 4:8

பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

וְאֶת, כָּל, עַל, כָּל, עַל
லேவியராகமம் 4:9

இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,

וְאֶת, עַל, וְאֶת, עַל, עַל
லேவியராகமம் 4:11

காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,

וְאֶת, וְאֶת, כָּל, עַל
லேவியராகமம் 4:12

காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக் கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.

כָּל, אֶל, אֶל, אֶל, עַל, עַל
லேவியராகமம் 4:13

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,

כָּל
லேவியராகமம் 4:15

சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.

עַל
லேவியராகமம் 4:16

அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,

אֶל
லேவியராகமம் 4:18

ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

עַל, כָּל, אֶל, מִזְבַּ֣ח
லேவியராகமம் 4:19

அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,

כָּל
லேவியராகமம் 4:21

பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

אֶל
லேவியராகமம் 4:24

அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.

עַל
லேவியராகமம் 4:25

அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

וְלָקַ֨ח, הַכֹּהֵ֜ן, מִדַּ֤ם, הַֽחַטָּאת֙, בְּאֶצְבָּע֔וֹ, וְנָתַ֕ן, עַל, קַרְנֹ֖ת, מִזְבַּ֣ח, הָֽעֹלָ֑ה, וְאֶת, יִשְׁפֹּ֔ךְ, אֶל, יְס֖וֹד
லேவியராகமம் 4:26

அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப் போல, பலிபீடத்தில் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

וְאֶת, כָּל
லேவியராகமம் 4:28

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,

עַל
லேவியராகமம் 4:30

அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

וְלָקַ֨ח, בְּאֶצְבָּע֔וֹ, וְנָתַ֕ן, עַל, קַרְנֹ֖ת, מִזְבַּ֣ח, הָֽעֹלָ֑ה, וְאֶת, כָּל, דָּמָ֣הּ, יִשְׁפֹּ֔ךְ, אֶל, יְס֖וֹד, הַמִּזְבֵּֽחַ׃
லேவியராகமம் 4:31

சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

וְאֶת, כָּל
லேவியராகமம் 4:35

சமாதான பலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப் போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

וְאֶת, כָּל, עַל
And
the
priest
וְלָקַ֨חwĕlāqaḥveh-la-KAHK
shall
take
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
of
the
blood
מִדַּ֤םmiddammee-DAHM
of
the
sin
offering
הַֽחַטָּאת֙haḥaṭṭātha-ha-TAHT
with
his
finger,
בְּאֶצְבָּע֔וֹbĕʾeṣbāʿôbeh-ets-ba-OH
and
put
וְנָתַ֕ןwĕnātanveh-na-TAHN
it
upon
עַלʿalal
the
horns
קַרְנֹ֖תqarnōtkahr-NOTE
of
the
altar
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
of
burnt
offering,
הָֽעֹלָ֑הhāʿōlâha-oh-LA
and
shall
pour
out
וְאֶתwĕʾetveh-ET
all
כָּלkālkahl
the
blood
דָּמָ֣הּdāmāhda-MA
thereof
at
יִשְׁפֹּ֔ךְyišpōkyeesh-POKE
the
bottom
אֶלʾelel
of
the
altar:
יְס֖וֹדyĕsôdyeh-SODE


הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak